ராதிகா மீதான கஜேந்திரனின் பாசத்தை பயன்படுத்தி ராதிகாவிற்காக மஞ்சரியை விடுதியில் சேர்க்கலாம் என்று கூற,
மனைவிக்கு கொடுத்த சத்தியத்தை மனதில் கொண்டு அவர் மறுத்துவிட்டார்.
இந்த விஷயம் அறிந்து ருத்ரேஷ்வர் ஆடிய ருத்ர தாண்டவத்தில் கஜேந்திரனுக்கு மஞ்சரி மீதான அவனது அன்பின் ஆழம் புரிந்தது என்றால், பாலாஜிக்கோ அவன் மீது சிறு பயம் பிறந்தது.
ஆம், அந்த சிறு வயதிலேயே ஆளுமை நிறைத்த ருத்ரேஷ்வர் மீது பாலாஜிக்கு சிறு அச்சம் பிறந்தது. அதனால் மஞ்சரியை அவன் இல்லாத நேரத்தில் மட்டுமே திட்டுவார். மஞ்சரியோ அவருக்கு பயப்படாமல் அவரை எதிர்கொள்வதோடு வேண்டுமென்றே அவர் காதுபட ‘ருது மாமா’ என்று அழைத்து அவனுடன் சிரித்துப் பேசி அவரை வெறுப்பேற்றுவாள்.
இப்படியே சென்று கொண்டிருந்த வேளையில் நரேனுக்கு உடம்பு சரி இல்லாமல் போய், அவன் பிழைத்ததே ‘மறுபிழைப்பு’ என்ற நிலையில் தேறி வந்தான். ராதிகா நாற்பது நாட்கள் விரதம் இருந்து பால் குடம் எடுப்பதாக வேண்டி இருந்தார்.
அவன் தேறியதும், அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தார். அதில் தவித்தது என்னவோ பாலாஜி தான். இரவில் மனைவியை நாட முடியாமல் தவித்துத் தான் போனார்.
ராதிகாவின் விரதம் நிறைவேறும் தருவாயில் இருந்த நிலையில், கஜேந்திரன் மனைவி வழியில் நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணம் வர, அந்த நேரத்தில் மஞ்சரி பங்கேற்கும் பள்ளிகளுக்கான கலை நிகழ்ச்சி வந்தது. மஞ்சரியை விட்டுவிட்டு திருமணத்திற்கு செல்ல ருத்ரேஷ்வர் யோசிக்க, மஞ்சரி தான் அவனை சமாதானம் செய்து அனுப்பினாள்.
திருமணம் மற்றும் தொழில் நிமித்தம் கஜேந்திரன் அந்தப் பயணத்தை இரண்டு நாட்களுக்கு திட்டமிட்டு இருந்தார். மஞ்சரி பிறந்ததில் இருந்து பிரிந்தே இராத இருவருக்கும் இந்த பிரிவு கஷ்டமாகத் தான் இருந்தது. அதுவும் மஞ்சரிக்கு நடக்க இருக்கும் கொடுமையை அவனது உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ, அவன் மனமே இல்லாமல் தான் கிளம்பிச் சென்றான்.
தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற கிருஷ்ணா, நரேன் மற்றும் நித்யாவை அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருக்கும் குல தெய்வக் கோவிலுக்கு கிளம்பிய ராதிகா, இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொல்லி சென்று இருக்க, கடவுள் மீது பெரிதாக நம்பிக்கை இல்லாத பாலாஜி வீட்டில் இருந்தார்.
ருத்ரேஷ்வரின் அறிவுரையில் பாலாஜி கண்ணில் பாடாமல் மஞ்சரி இருந்து கொள்ள, முதல் நாள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் தான் சென்றது. இரண்டாவது நாளும் மாலை வரை எந்தப் பிரச்சனையும் இல்லை.
அடுத்த நாள் காலையில் அனைவரும் வீட்டிற்கு திரும்ப இருக்க, அதுவும் ருத்ரேஷ்வரை காணப் போகும் ஆவலில், மஞ்சரி சுற்றிக் கொண்டு இருந்தாள்.
அன்று மாலை 6.30 மணிக்கு பாலாஜி கிளம்பி வெளியே சென்றார். மஞ்சரிக்கு துணையாக ருத்ரேஷ்வரின் ஏற்பாட்டில் தங்கி இருந்த சமையல்காரம்மாவின் பேத்திக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக இரவு ஒன்பது மணி அளவில் கைபேசியில் அழைப்பு வரவும், மஞ்சரி அவரை உடனே கிளம்பக் கூறினாள்.
அந்த நிலையிலும் அவளை தனியாக விட்டுச் செல்ல அவர் தயங்க, அவள் தான் வெளியே காவலாளி இருக்கிறான், சற்று நேரத்தில் பாலாஜியும் வந்து விடுவார் என்று கூறி அவரை அனுப்பி வைத்தாள்.
இரவு பன்னிரெண்டு மணி அளவில் பாலாஜி நண்பனுடன் வீட்டிற்கு வந்தார். தூக்க கலக்கத்துடன் கதவை திறந்த மஞ்சரி, குடித்துவிட்டு வந்தவரை கண்டு முகத்தை சுளித்தாள்.
பாலாஜி குடி போதையில், “என்னடி முகத்தை சுளிக்கிற?” என்றபடி அவள் கன்னத்தை பற்ற வர, அவள் அவரது கையை தட்டிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டாள்.
பாலாஜியின் நண்பன் கண்ணில் ஒரு ஒளியுடன், “யாருடா இந்தக் குட்டி? சோக்கா இருக்குதே!” என்று கேட்டான்.
“அது ஒரு கழிசடை.. அவளை பத்தி எதுக்கு பேசுற! வா ரூமுக்கு போகலாம்.”
“ஓ வேலைகாரியா?” என்றவன், “வீட்டுலேயே டக்கரா ஒரு பிகர் இருக்குதுனு சொல்லவே இல்லையே!” என்றான்.
பாலாஜி புரியாமல், “யாரைடா சொல்ற?” என்று சற்றே குளறலாக கேட்டார்.
“அதான் இப்போ கதவை திறந்து விட்டுச்சே! அந்த பொண்ணத் தான் சொல்றேன்”
“சீ.. அவளா?”
“என்னடா இப்படி சொல்ற! என்னா சோக்கா இருக்குது!”
“எனக்கு அந்த மூஞ்சியை பார்க்கவே பிடிக்காது.. அது தான் அந்த மஞ்சரி”
“என்னது!” என்று சிறிது அதிர்ந்த நண்பன் போதை சற்றே இறங்கியவனாக, “மஞ்சரினா உன் பொண்டாட்டியோட பொண்ணு தானே!” என்றான்.
“ஆமா.. ஆமா.. அந்த சனியன் தான்.”
“அந்த பொண்ணுக்கு ஒரு பதினோரு பன்னிரெண்டு வயசு தானே சொன்ன!”
“ஹ்ம்ம்.. பதினொன்னு முடியப் போகுது”
“ஆனா இந்த பொண்ணைப் பார்க்க அப்படி தெரியலையே! தாவணியில் இருக்குது! பதினைந்து பதினாறு வயசு இருக்கும் நினைச்சேன்டா.. நீ நல்லா பார்த்தியா? கதவை திறந்தது மஞ்சரி தானா?”
“ஹ்ம்ம்.. வளர்த்தி கொஞ்சம் அப்படி தான் இருக்கும்.. எதுக்கு தாவணி கட்டி இருக்கானு தெரியலை.. இன்னைக்கு தான் கட்டி இருக்கா.. அதை விடு.. அந்த சரோஜா எப்போ வருவா?”
(அன்று பள்ளிகளுக்கான கலைநிகழ்ச்சியில் நாடகம் மற்றும் பேச்சு போட்டியில் கலந்து கொண்டவள் நாடகத்திற்காக தாவணி கட்டி இருந்தாள். ருத்ரேஷ்வரிடம் காட்ட வேண்டும் என்று அந்த உடையிலேயே இருந்தாள்.)
‘ச! குழந்தையா அது! குமரினு நினைச்சேனே!’ என்று சிறு ஏமாற்றத்துடன் மஞ்சரி சென்ற திசையை பார்த்தபடி மனதினுள் நினைத்த அந்த நண்பன்,
“ஒரு மணி நேரத்தில் வரேன்னு சொன்னா” என்றான்.
அதன் பிறகு.. இருவரும் விருந்தினர் அறைக்குச் சென்றனர்.
சிறிது நேரத்தில் பாலாஜி, “என்னடா இன்னும் காணும்? வருவா தானே!” என்று சந்தேகமாகக் கேட்டார்.
நண்பன் சிரிப்புடன், “வருவாடா.. என்ன அவசரம்?” என்றான்.
“ஒரு மாசத்துக்கு மேல காஞ்சு போய் இருக்கிறேன்டா”
“முதல்லேயே சொல்லி இருந்தா, ஏற்பாடு செய்து இருப்பேன்.”
“ப்ச்.. இன்னைக்கு தானே உன்னைப் பார்த்தேன்.. இன்னைக்கு தான் வீட்டிலும் யாரும் இல்லை.”
“இங்கே இல்லனா, வேற இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பேன்”
“டேய்.. வாட்ச்மேன் கண்ணில் படாம அவுட்-ஹவுஸ் பக்கம் இருக்க சின்ன கேட் வழியா வந்து பின் பக்க கதவு வழியா தானே வீட்டுக்குள்ள வரச் சொன்ன?”
“ஆமாடா.. எத்தனை முறை தான் கேட்ப?”
“சரி சரி” என்றவர், “அவ வெளியே எங்கேயும் பார்க்கும் போது, தெரிந்த மாதிரி காட்டிட மாட்டா தானே!” என்று சிறு பயத்துடன் கேட்டார்.
“ஏன்டா இப்படி பயப்படுற?”
“என்னவோ பயமா இருந்தாலும், இந்த உடம்பு கேட்க மாட்டிக்குதே! நீ வேற கன்னாபின்னானு பேசி ஆசை காட்டிட்ட!”
சிரித்த நண்பன், “இந்த பயம் எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தான்.. அப்புறம் உனக்கே பழக்கிடும்.. ப்ரீயா விடு மச்சான்” என்றான்.