விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23.5

ஹரீஷ் அதிர்ச்சியுடன் நிற்க, “சாரி சார்” என்ற விஜய் அணிச்சலை மேசை மீது வைத்துவிட்டு திவ்யா பின்னால் ஓடினான்.

வகுப்பிலிருந்து இப்படி வெளியே சென்று பழக்கமில்லாத பவித்ரா கவலையுடன் அமர்ந்திருந்தாள்.

சில நொடிகளில் சுதாரித்த ஹரீஷ் பாடத்தை நடத்த ஆரம்பித்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே சரியாக நடத்த முடியாமல் முதல் முறையாக தடுமாறியவன், “டேக் நோட்ஸ்” என்று கூறி புத்தகத்தை பார்த்து கூற ஆரம்பித்தான்.

அந்த வகுப்பு முடியும் வரையிலும் திவ்யாவும் விஜயும் வகுப்பிற்கு வரவில்லை.

வகுப்பு முடிந்ததும் அவன் திவ்யாவை தேடி உணவகத்திற்கு சென்றான் ஆனால் அங்கே அவள் இல்லை. அவளை சில இடங்களில் தேடியவன் அவளும் விஜயும் ஒரு மரத்திற்கு பின் அமர்ந்திருந்ததை சரியாக கவனிக்கவில்லை.

சோர்ந்து போய் ஆசிரியர் அறைக்கு சென்றவனை பார்த்து அரவிந்த், “என்னாச்சு ஹரி?” என்று கேட்டான்.

திவ்யா கூறியதை சொன்னவன், “இப்போ எங்க இருக்கானு தெரியலைடா.. எனக்கு பயித்தியம் பிடிப்பது போல் இருக்குது”

“போன் செய்தியா?”

“அவ போன் எடுத்துட்டு போகலை”

“காலேஜ்ஜில் தான் இருப்பா.. கொஞ்ச நேரத்தில் வந்திருவா.. வெயிட் பண்ணு”

சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்திருந்தவன், “நான் சேர்மன் சாரை பார்த்துட்டு வரேன்” என்று கூறி சென்றான்.

ராஜாராமின் அனுமதியுடன் உள்ளே சென்றவன், “குட் மார்னிங் சார்” என்றான்.

“குட் மார்னிங்.. என்ன விஷயம்?”

“அது” என்று சிறிது தயங்கியவன் பின், “ஒன்னு தெரிஞ்சுக்கனும்”

“என்ன?”

“உங்களுக்கும் திவ்யாவிற்கும் என்ன உறவுனு தெரிஞ்சுக்கலாமா சார்?”

“ஏன் கேட்கிறீங்க?”

இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்தவன் தயங்காமல் யோசித்து வைத்திருந்த பதிலை சொன்னான். ஆனால் அதை திவ்யா கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறியவில்லை.

விஜயின் கைபேசியின் மூலம் பாடல்களை கேட்டு ஓரளவிற்கு தன்னை சமன் செய்திருந்தவள் வகுப்பிற்கு செல்லும் முன் ஹரீஷை பார்க்க விரும்பி ஆசிரியர் அறைக்கு சென்றாள். அரவிந்த் ஹரீஷ் ராஜாராமை பார்க்க சென்றதாக கூறவும் இங்கே வந்தாள். அன்று போல் கதவை அவள் திறந்த போது ஹரீஷ் அவர்களின் உறவை பற்றி கேட்டான். ஏனோ அன்று போல் உள்ளே செல்லாமல் ஹரீஷ் அடுத்து கூற போகும் பதிலை அறிய அமைதியாக நின்றாள்.

ராஜாராமும் ஹரீஷும் கதவு லேசாக திறந்ததை கவனிக்கவில்லை.

ஹரீஷ், “அவளை பற்றிய கவலை உங்களுக்கு இருப்பது எனக்கு தெரியும்.. உங்களுக்குள் ஏதோ பிரச்சனைனு புரியுது.. என்னால் முடிந்தால் அதை சரி செய்வேன்.. எனக்கு உங்க நிம்மதி முக்கியம்”

“இது மட்டும் தானா காரணம்?” என்று அவரது கேள்வி கூர்மையுடன் வந்தது.

அவனும் அசராமல், “ஆமாம் சார்” என்று கூறி வேதனையில் உழன்றுக் கொண்டிருந்த திவ்யாவின் இதயத்தை உடைத்தான்.

ராஜாராம், “திவ்யாக்கு ஏனோ உங்களை பிடிச்சிருக்குது.. ஒருவேளை நீங்க சொன்னால் அவள் கேட்பாளோ என்ற ஆசையில் சொல்கிறேன் ஆனா…………..”

“என்னை தாண்டி வெளியே போகாது சார்”

“தன்க்யூ.. உட்காருங்க” என்றவர் அவன் இருக்கையில் அமர்ந்ததும், “திவ்யா என் மகள்” என்றார்.

அவன் சிறு அதிர்ச்சியுடன் பார்க்கவும்,

அவர், “அன்பையும், பாசத்தையும், உணர்வுகளையும் வைத்து பார்த்தால் திவ்யா என் மகள்.. ஆனா உயிரியல் முறையில் பார்த்தால் என் மகள் இல்லை”

அவன் அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பார்க்கவும் அவர், “என்ன குழப்புறேனா?”

“..”

“திவ்யா என் மனைவி சுபாஷினிக்கும் ராகவனுக்கும் பிறந்தவள்.. ராகவன் யாருன்னு…..”

“தெரியும் சார்” என்றான் அதிர்ச்சி நீங்காமல்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கிளம்பியவள் வெளியே நின்றிருந்த விஜயிடம், “என்னை இப்பவே உன் வீட்டுக்கு கூட்டிட்டு போறியா விஜி?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

அவள் கண்ணில் தெரிந்த வெறுமையிலும் வலியிலும் துணுக்குற்ற விஜய், “வா” என்று கூறி அவளை அழைத்துச் சென்றான்.

இருவரும் சுவர் ஏறி குதித்து தானியில் அவனது வீட்டிற்கு சென்றனர். தானியில் சென்ற நேரம் முழுவதும் அவள் வானை வெறித்துக் கொண்டே சென்றாள்.

வீட்டிற்கு சென்றதும் விஜயின் அன்னை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தனது சிந்தனையில் சுழன்றவள், “விஜி உன் மடியில் படுத்துக்கட்டுமா?” என்று கேட்டாள்.     

அவர்கள் கூடத்தில் அமர்ந்திருந்தனர். விஜய் சிறு சங்கடத்துடன் அன்னையை பார்க்க அவரோ, “உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் பேசு” என்றார்.

“தேங்க்ஸ் மா” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.

உள்ளே சென்றதும் கட்டிலில் அவன் அமர்ந்ததும் அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.

விஜய் தாய் அன்புடன் அவளது கேசத்தை வருடி கொடுத்தான்.

சில நிமிடங்களில் கலங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எப்போதும் என்னை பற்றி கேட்பியே! இப்போ சொல்லட்டா டா?”

அவன் பதைபதைக்கும் நெஞ்சுடன், “சொல்லுடாஎன்றான்.

“இன்னைக்கு மட்டும் என்ன திடீர்னு சொல்றேன்னு பார்க்கிறியா?” என்று கேள்வி கேட்டவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவளே பதிலையும் சொன்னாள், “என்னவோ நெஞ்சு வெடிக்கிற மாதிரி இருக்குது.. என்னால் இந்த பாரத்தை தாங்க முடியலைடாஎன்றவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிய தொடங்கியது.

அவளது கண்களை துடைத்து விட்டவன், “உன் பாரத்தை சுமக்க நான் இருக்கிறேன்டா.. எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன்.. சொல்லுடாஎன்றான்.

“நான்.. நான்..” என்று தயங்கியவள்கலங்கிய விழிகளுடன், “நான் இல்லீகல் சைல்ட் தெரியுமா?” என்றாள்.

விஜய் தனது அதிர்ச்சியை சிறிதும் கண்களில் காட்டாமல் மீண்டும் அவள் கண்களை துடைத்து தலையை வருடியபடி மென்மையானக குரலில், “அது உன் தப்பு இல்லையேடாஎன்றான்.

“தேங்க்ஸ்டாஎன்றவள் எதையெதையோ நினைத்து கதறி அழுதாள்.

error: Content is protected !!