விட்டாலும் விலகாதே! ~ விலகல் 23.1

ஹரீஷ் ஆய்வு கூடம் இருந்த கட்டிடத்திலிருந்து அவனது ஆசிரியர் அறை இருக்கும் கட்டிடத்திற்கு செல்லும் போது ஒரு மரத்தின் அருகே திவ்யா ஒருவரை முறைத்துக் கொண்டு நிற்பதை கண்டவன் வேகமாக சென்றான்.

ஹரீஷ், “எனி ப்ராப்ளம் திவ்யா?”

திவ்யாவின் மதிப்பெண்களை பற்றி அறிந்து அவளை வாழ்த்த வந்திருந்த ராகவன் (திவ்யா முறைத்த நபர்) இவனை முறைக்க, இவன் அவரை முறைத்துவிட்டு திவ்யாவை பார்த்தான்.

திவ்யா, “எனக்கு தெரிந்தவர் தான்”

ஹரீஷ் புருவம் உயர்த்தி பார்க்க, அவரோ வேதனையுடன் திவ்யாவை பார்த்தார்.

அவரது கண்ணில் தெரிந்த வலியில் அவன் யோசனையுடன் பார்க்க, அவள் வானை வெறித்தபடி, “இவர் மிஸ்டர் ராகவன்.. சொர்ணம் கோல்ட் ஷாப் அண்ட் RR டிரெஸ் ஷாப் ஓனர்.. புரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.

ஒரு நொடி அதிர்ந்த ஹரீஷ் பின் அவரிடம், “சாரி சார்.. நான் உங்களை பார்த்தது இல்லை.. நான் திவ்யாவோட சார் ஹரீஷ்” என்றான்.

அவர் இவனை அதிகமாக முறைத்தார்.

அவன் புரியாமல் பார்க்கவும், அவர், “எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண அடிச்சிருப்ப! அப்போ நான் ஊரில் இல்லை.. ஒரு மாசம் கழிச்சு விஷயம் தெரிந்து, வந்தபோது உன் சேர்மன் உன்னை காப்பாத்திட்டான்..”

அவன் நிமிர்வுடன், தப்பு உங்க பொண்ணு கிட்ட தான் இருந்தது”

ராகவன் கோபத்துடன், “டீயை கொட்டியதுக்காக கையை நீட்டுவியா? என் பொண்ணே உன்னை மன்னிச்சதால் தான் உன்னை எதுவும் செய்யலை

இல்லைனா?”

“உன்னை உருத் தெரியாமல் செய்திருப்பேன்”

“முடிந்தா செய்து பாருங்களேன்”

“அடிச்சு போட்டா ஏன்னு கேட்க ஆள் இல்லாத அனாதை! உனக்கு இவ்வளவு திமிரா!” என்று இகழ்ச்சியுடனும் கோபத்துடனும் பேசினார்.

ஹரீஷ் பதில் சொல்ல வாய் திறக்கும் முன் திவ்யா, “பவித்ரா” என்று சற்று குரலை உயர்த்தி கத்தி இருந்தாள்.

சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்த பவித்ரா வேகமாக வந்தாள்.

ஹரீஷிடம் கோபத்துடன், “என்னை இவரோட பொண்ணுனு சொல்லாஎன்ற திவ்யா  பவித்ராவை பார்த்து, “அவரை ரிஷி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு” என்றாள்.

பவித்ரா அமைதியாக நிற்க திவ்யா கோபத்துடன், “சொல்லுடி” என்று கிட்டதிட்ட கத்தினாள்.

பவித்ரா ராகவனை பார்க்க, அவரோ திவ்யாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார். மகளின் அன்னிய வார்த்தைகளிலும், தான் எது செய்தாலும் சரி என்று சொல்லும் மகள் இன்று தன்னை மன்னிப்பு கேட்க சொல்லவும் பேச்சற்று நின்றிருந்தார்.

வெளியே மற்றவர்களிடம் பணத்திமிரை காட்டியவர் இன்று தான் முதல் முறையாக மகள் முன் அதை காட்டுகிறார் என்பதை அவர் மறந்திருந்தார். எப்பொழுதும் மகள் இருக்கும் நேரத்தில் அவரிடம் பாசம் மட்டுமே மேலோங்கி இருக்கும் ஆனால் இன்று அவள் ஹரீஷிடம் தன்னை மூன்றாம் மனிதன் போல் பேசவும் அவரையும் அறியாமல் பணத்திமிரை காட்டிவிட்டார்.

திவ்யா கடும் கோபத்துடன், “மாறிட்டேன் மாறிட்டேன்னு சொல்றாரே! இவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை.. பணத்திமிர் இவரை விட்டு போகவே போகாது.. அது இவர் ரத்தத்தில் ஊறி இருக்குது”

ராகவன் வேதனையுடன், “குட்டிமா” என்று ஏதோ சொல்ல போக கையை நீட்டி அவரை தடுத்தவள்,

“நேத்து தான் இவரோட க்ளோஸ் பிரெண்ட் கிட்ட போனல பேசினேன்னு சொல்லு.. இவரோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்திட்டார்.. இவர் முகத்தை கூட நான் பார்க்க விரும்பலை.. இது தான் இவரை பார்க்கிறது கடைசியா இருக்கட்டும்.. மீறி இவர் என்னை பார்க்க வந்தா அன்னைக்கு தான் எனக்கு கடைசி நாள்.. அதாவது நான் பூமியில் ஜனிக்க காரணமானவரே நான் மரணிக்கவும் காரணமானவரா இருப்பார்”

“குட்டிமா”, “திவ்யா”, “தியா” என்ற மூன்று குரல்கள் ஒலித்தது. மூவரும் ஒன்றாக அழைத்ததில் ஹரீஷின் ‘தியா’ ‘திவ்யா’-வாகவே ஒலித்ததோ இல்லை அதிர்ச்சியில் யாரும் கவனிக்கவில்லையோ!

திவ்யாவின் கோபத்தை ஹரீஷ் அதிர்ச்சியுடன் பார்த்தான். அவளது கோபத்தை சில முறை கண்டிருக்கிறான் தான் ஆனால் இந்த ரௌத்திரத்தை முதல் முறையாக பார்க்கிறான். அந்த ரௌத்திரதிற்கு பின் இருக்கும் அவளது வலியும் வேதனையும் தான் அவனை மிகவும் பாதித்தது. அவளை தோள் சாய்த்து ‘உனக்கு நான் இருக்கிறேன்டா’ என்று சொல்ல அவன் மனம் துடித்தது தான் ஆனால் தன்னை கட்டு படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.

திவ்யாவின் வார்த்தைகளை கேட்டு ராகவன் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அதை சிறிதும் பொருட் படுத்தாத திவ்யா மேலும் பேசினாள்.

“சும்மா சொல்றேன்னு நினைக்க வேணாம்னு சொல்லு.. நான் சொன்னதை செய்பவள்.. அப்பறம் இன்னொரு விஷயம்.. நான் படிக்கிறது, செலவு செய்து எல்லாம் சாருமா எனக்காக விட்டு சென்ற பணம் தான்னாலும் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் இதையெல்லாம் திருப்பி கொடுத்துவிடுவேன்னு சொல்லு”

“இப்படி வார்த்தையால் கொல்றதுக்கு பதில் என்னை ஒரேடியா கொன்னுடுடா”

அவரைப் பார்க்காமல், “செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டாம்?” என்றவள் வேகமாக சென்றுவிட்டாள்.

கண்ணிலிருந்து மறையும் வரை திவ்யாவையே பார்த்துக் கொண்டிருந்த ராகவன் கண்களை துடைக்கும் எண்ணம் கூட இல்லாதவராக ஹரீஷை பார்த்து, “சாரி சார்.. நான் பேசியது தப்பு தான்.. மன்னிச்சிருங்க” என்றார்.

“நான் ஆனாதை தான், ஆனா ஏன்னு கேட்க ஆள் இல்லாதவன் இல்லை” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.

ராகவன் பவித்ராவிடம், “நான் சாரி கேட்டுட்டேன்னு சொல்லிடுமாஎன்று கூறி தளர்ந்த நடையுடன் சென்றார்.

‘இவர் இப்போ உண்மையா சாரி கேட்டாரா இல் திவிக்காக கேட்டாரா!’ என்று யோசித்த பவித்ரா, ‘எதுவா இருந்தா நமக்கென்ன! திவியை போய் பார்ப்போம்’ என்று மனதினுள் கூறிவிட்டு திவ்யாவை பார்க்க சென்றாள்.

பவித்ரா வகுப்பறையை நோக்கி சென்ற போது வழியில் ஆசிரியர் அறையில் ஹரீஷும் திவ்யாவும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ஆசிரியர் அறை வெளியே நின்றுக் கொண்டாள்.

error: Content is protected !!