விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13.3

அவன் முகத்தை கூர்ந்து பார்த்தவர், சரி, கொஞ்ச நேரம் வெளியே வெயிட் பண்ணு.என்றார்.

அவன் சென்றதும், தனது செயலாளரை அழைத்தார்.

செயலாளர் உள்ளே வந்ததும், கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி கேன்டீனில் ஏதும் பிரச்சனை நடந்ததானு விசாரிச்சிச் சொல்லுங்க… குவிக். என்றார்.

திவ்யா கல்லூரி உணவகத்தை விட்டு வெளியே சென்றதும் அவளது செய்கையை பற்றி யோசித்த சைமன், எப்பொழுதும் போல் இன்று அவள் ஆவேசப் படவில்லை என்பதை உணர்ந்து, அதற்கு காரணம், தான் பவித்ரா பற்றி பேசியது தான் என்பதை கண்டு கொண்டான். மேலும், தான் பேசியதை பற்றி அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்பதையும் சரியாகக் கணித்து, சாமர்த்தியமாக காயை நகர்த்தினான்.

அவன் மனதினுள், வாடி வா…! என்னையா அடிக்கிற! உன்னை சஸ்பெண்டு ஆக வைக்கிறேன். என்று கூறியபடி, வன்மத்துடன் ராஜாராம் அறையின் வெளியே அமர்ந்திருந்தான். 

ராஜாராமோ ‘அங்கே மீட்டிங்க்கு நேரமாகுது… இந்த பஞ்சாயத்தை முடிச்சிட்டு, நான் எப்போ போக! நாளுக்கு நாள் திவ்யாவோட செய்கை கூடிட்டே போகுது! அவ மனசு மாறனும்னு விட்டுக் கொடுத்து போய், நானே அவளோட குணத்தை மாத்திட்டு இருக்கிறேனோ!’ என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அனுமதி பெற்று உள்ளே வந்த செயலாளர், சார், திவ்யா மேடம் ஒருவனை அடிச்சி இருக்காங்க. ஆனா, என்ன பிரச்சனைனு தெரியல…!

மருத்துவக் கல்லூரியில் அவருக்காக காத்திருக்கும் ஒரு பிரச்சனையும், நேரமின்மையும், மன குழப்பமும் சேர்ந்து… ராஜாராமிற்கு ஆயாசமாக இருந்தது.

செயலாளர், சார்” என்று அழைக்கவும்.

திவ்யாவை வரச் சொல்லுங்க. என்றார்.

திவ்யாவின் வகுப்பிற்கு சென்ற ஏவலர், திவ்யாவை தாளாளர் அழைப்பதாகக் கூறவும்,

என்னை வேவு பார்க்க தனி ஸ்பை ஸ்குவார்ட் வச்சிருப்பார் போல!’ என்று அலுத்துக்கொண்டு எழுந்த திவ்யா, தன்னை யோசனையாகப் பார்த்த ஹரீஷை கண்டு, சும்மாவே இவனுக்கு என் மேல நல்ல அபிப்பிராயம் இல்லை’ என்று மனதினுள் பெருமூச்சை விட்டபடி, அவனிடம் தலை அசைத்துவிட்டு வெளியே சென்றாள்.

தாளாளர் அறை நோக்கிச் சென்றவள், வெளியே அமர்ந்து தன்னை வெற்றிப் புன்னகையுடன் பார்த்த சைமனைக் கண்டு, யோசனையுடன் உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே சென்றதும் ராஜாராம் சிறு கோபத்துடன், வர வர நீ பண்ணும் பிரச்சனைகள் கூடிட்டே போகுது… இப்படி செய்றதால் உன் பெயரை தான் கெடுத்துக்கிற… ஒரு நாளைக்கு எத்தனை பிரச்சனையை தான் கிளப்புவ?”

அவள், அவரை அமைதியாகப் பார்த்தாள்.

அவர், என்ன?”

இப்போ நான் என்ன சொல்லனும்?”

அவர் அமைதியாக பார்க்கவும், அவளும் அமைதியான குரலில், ஸோ நான் தான் பிரச்சனை செய்தேன்னு முடிவு செய்துட்டீங்க…” என்றவள் அவரை தீர்க்கமாகப் பார்த்து, இது வரை நான் எந்த ஸ்டுடென்ட் கூடயாவது பிரச்சனை செய்திருக்கிறேனா?”

ராஜாராம், சிறு தவிப்புடன் ‘இல்லை’ என்பது போல் தலையை ஆட்டினார்.

திவ்யா, “HOD விஷயத்திலாவது எனக்கு எதிரா ஆதாரம் இருந்தது… ஆனா இது…” என்று ஒரு நொடி நிறுத்தியவள், நீங்க மட்டுமே என்னை புரிந்து கொண்டிருப்பதா நினைத்தேன்… அது தப்புனு புரிய வச்சிட்டீங்க…”

ராஜாராம் தவிப்புடன் “திவிமா, நான்…”

கையை காட்டி அவரது பேச்சை நிறுத்தியவள், அவன் என்ன சொன்னான்?”

திவிமா….”

அவன் சொன்னதை மட்டும் சொல்லுங்க. என்று இறுகிய குரலில் கூற,

ராஜாராம் மனதினுள் நொந்தபடி, அவன் தெரியாம உன்னை இடிச்சதுக்காக, நீ அவனை அடிச்சதாச் சொன்னான்.

ஓ”

நான் வேற ஒரு டென்ஷனில், உன்கிட்ட அப்படி பேசிட்….”

என் இடத்தில் ஜனனி இருந்திருந்தால்?”

நீயும், ஜனனியும் எனக்கு ஒன்னு தான்.

திவ்யா அவரை நம்பாத பார்வை பார்க்கவும்,

அவர் தீர்க்கமான குரலில், நீ நம்பலனாலும், உங்களுக்குள் நான் வேறுபாடு பார்ப்பது இல்லை… அப்புறம் உன் இடத்தில அவ இருந்து இருந்தா, அவளை அடிச்சு இருப்பேன்.

இதிலேயே உங்க வேறுபாடு தெரிதே! அவளும், நானும் வேற வேற தான்.

அவர் புரியாது பார்க்கவும், அவள் விரக்திப் புன்னகையுடன், அவ உங்க பொண்ணு அதனால் அடிச்சு இருப்பீங்க… நான் யாரோ, அதான்…”

திவ்யா! நான் என்ன சொன்னால், நீ என்ன சொல்ற! உன் மேல உள்ள நம்பிக்கையில் உன்கிட்ட பேசிட்டு இருக்கிறேன். ஆனா, ஜனனி கொஞ்சம் முன் கோபி. சில நேரம் யோசிக்காம செய்துவிட்டு, பின்னாடி பீல் பண்ணுவா…! இந்த மாதிரி விஷயத்தில் அவ கொஞ்சம் நிதானமின்றி செயல் பட வாய்ப்பு இருக்குது… அதனால், பெரிய பிரச்சனையில் மாட்டிக்கக் கூடாதேனு அவளை கண்டிக்க அடித்து இருப்பேன்னு சொன்னேன்…” என்று நீண்ட விளக்கத்தை கூறியவர், ஏன்டா, என்னை புரிஞ்சுக்கவே மாட்டிக்கிற! புரிஞ்சுக்க முயற்சி கூட செய்ய மாட்டேன்னு, ஏன் அடம் பிடிக்கிற?” என்று வருந்தினார்.

அவள் இறுகிப் போய் நின்றிருந்தாள். பின் இறுகிய குரலில், நம்ம சொந்த விஷயம் பற்றி பேச வேண்டாம்.

பெருமூச்சை வெளியிட்டவர், சரி… அவன் என்ன செய்தான்?”

அதைத் தான் அவன் சொன்னானே!”

நான் உண்மையை கேட்டேன்.

இனி, அது தேவை இல்லாதது… அவன் சொன்னதை வைத்து எனக்கு பனிஷ்மென்ட் கொடுங்க.

அந்த நேரம், உன்னோட பவித்ராவோ விஜய்யோ இருந்தாங்களா?”

என் மேல் கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தால், இதுக்கு மேல இதை பற்றி விசாரிக்காம, அவனை நான் அடிச்சதுக்காக எனக்கு பனிஷ்மென்ட் கொடுங்க.

அவர் அவளை தீர்க்கமாகப் பார்க்கவும்,

அவன் என்னை சஸ்பெண்டு செய்ய வைக்க தான் பொய் சொல்லியிருக்கான்… அதையே செஞ்சிடுங்க.என்றவள் மெல்லிய புன்னகையுடன், இதனால் வெற்றி எனக்கு தான். என்றாள்.

எப்படி?”

அவள் புன்னகையுடன், இன்னைக்கு சாயங்காலத்துக்குள் உங்களுக்கு அது புரியும். என்றாள்.

உன் மேல் உள்ள நம்பிக்கையில் நீ சொன்னதை செய்கிறேன்… அவனை நீ அடிச்சதுக்காக, டூ டேஸ் உன்னை சஸ்பெண்டு செய்றேன்.

அவர் ‘நம்பிக்கை’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறினார்… அப்பொழுது, அவளது இதழில் மெல்லிய புன்னகை அரும்பியது. ஆனால், அதன் மூலம் அவள் மனதை படிக்க அவரால் முடியவில்லை.

“தேங்க் யூ” என்று கூறி வெளியேறப் போனவள், அவரை திரும்பிப் பார்த்து, அஞ்சு நிமிஷம் பிடிச்ச பாட்டை கேளுங்க… டென்ஷன் போய் மனசு ரிலாக்ஸ் ஆகிரும்….” என்றாள்.

ஏதோ சொல் வாய் திறந்தவர் பின், தேங்க்ஸ் திவிமா” என்றார் புன்னகையுடன்.

அவள் புன்னகைத்துவிட்டு வெளியேறினாள். அவள் சென்றதும் சைமனை அழைத்தவர், அவளுக்கு கொடுத்த தண்டனையை பற்றி கூறவும், அவன் மகிழ்ச்சியுடன், “தேங்க் யூ சார்” என்று கூறி வெளியேறினான்.

error: Content is protected !!