
விலகல் – 9
விடுமுறை நாட்கள் முடிந்து கல்லூரி திறந்து ஒரு வாரம் கடந்திருந்தது.
விஜய் மற்றும் சில வகுப்பு தோழர்களுடன் திவ்யா ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்க, அப்பொழுது அங்கே வந்த பவித்ரா, “எதுக்குடி சீக்கிரம் வரச் சொன்ன? எப்பவும் வேணும்னு லேட்டா வர நீ, சீக்கிரம் வந்திருக்க! அப்படி என்ன விஷயம்?”
“இன்னைக்கு தான் பஸ்ட் இயர்ஸ் வராங்க”
“அதுக்கு?”
“நாம தானே பைனல் இயர் சீனியர்ஸ்”
“நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.. கிளாஸ் போறேன்” என்று கூறி கிளம்பப் போனவள் கையை பிடித்து நிறுத்திய திவ்யா,
“ஓடின! பிச்சிடுவேன்.. ஒழுங்கா வந்து உட்காரு”
“இந்த ராகிங்லாம் வேணாம்டி”
விஜய், “நாம பஸ்ட் இயரா இருந்தப்ப நம்மை ராகிங் செய்தாங்க தானே! இப்போ நம்ம டர்ன்”
அவனை முறைத்த பவித்ரா திவ்யாவிடம், “உன்னைத் தான் ராகிங் செய்ய விடாம சேர்மேன் சார் உன் கூடவே வந்தாரே!”
“அதனால் தான் இந்த முடிவு”
“என்ன?”
“நம்மைத் தான் யாரும் ராகிங் செய்யலை, நாமாவது ராகிங் செய்யலாம்னு” என்று கூறி கண் சிமிட்டினாள்.
பவித்ரா முறைப்புடன், “இது என்னடி லாஜிக்?”
“இது தான் திவ்யா லாஜிக்” என்று கூறி புன்னகையுடன் விஜய்யுடன் கை தட்டினாள்.
“நீங்க என்னவும் செய்துத் தொலைங்க.. என்னை எதுக்குடி பிடிச்சு வச்சிருக்க?”
“பைனல் இயர் வந்தும் ரொம்ப நல்ல பிள்ளையாவே இருக்கிறியே! அதான் இனி எங்க ஆட்டம் எல்லாத்திலும் உன்னை சேர்த்துக்கிறதா முடிவு செய்துட்டேன்”
“உனக்கு ஏன்டி இப்படி ஒரு நல்ல எண்ணம்!”
“ரியாக்சன் தப்பா இருக்கே! இதுக்கு நீ நெஞ்சைப் பிடிச்சு இருக்கணுமே..!” என்று கூறி மீண்டும் நண்பனுடன் கை தட்ட, பவித்ரா இருவரையும் முறைத்தாள்.
திவ்யா, “இங்க உட்கார்ந்து முறைச்சிட்டே, நாங்க செய்றதை பாரு.. பஸ்ட் இயர்ஸ் நீ டெரர்னு நினைச்சுப்பாங்க”
பவித்ரா ‘ஆண்டவா என்னை காப்பாத்து’ என்று மனதினுள் அலறியபடி அமர்ந்தாள்.
அப்பொழுது முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் வந்தனர். திவ்யாவின் கண்ணசைவில் விஜய், “ஏய்!!!” என்று கத்தி அவர்களை அழைத்தான்.
பவித்ரா, “அவங்க பஸ்ட் இயர்ஸ்னு எப்படி தெரியும்?”
“நீயெல்லாம் எப்போ வளர போற! அவங்ககிட்ட ஐடி கார்ட் இல்லை..”
“ஓ” என்றவள், “ஒருவேளை அவங்க ஐடி கார்ட் போடாம வந்தால்?”
“நம்ம ஊர்காவலன்(கல்லூரி வாயில் காவலர்) ஐடி கார்ட் போடாம உள்ள விடுவாரா?”
“பஸ்ட் இயர்னு அவரை ஏமாத்திட்டு வந்திருந்தால்?”
“செகண்ட் இயரில் இருந்து நம்ம முகங்கள் அவருக்கு பழகி இருக்கும்.. ஸோ யாரு பஸ்ட் இயர் னு அவருக்கு தெரியும்.. அப்படியே நாம தப்பா கூப்பிட்டாலும் யாரும் நம்ம தலையை சீவிடப் போறதில்ல”
பவித்ரா “ஹீ..ஹீ” என்று சிரித்தபடி திவ்யாவின் சிறு கடுப்பை போக்க நினைத்தாள்.
அவர்கள் வகுப்பு தோழன் ஒருவன் பவித்ராவை பார்த்து, “இப்படி ஒரு முறையாவது நீ கேள்வி கேட்டு இருந்தால், அந்த நொந்த குமார் ஓடி இருப்பான்”
பவித்ரா அவனை முறைக்க, அவன் அதை கண்டுக் கொள்ளவே இல்லை.
அப்பொழுது விஜய் அழைத்த நான்கு மாணவர்கள் அங்கே வந்தனர்.
ஒவ்வொருவரையும் பார்த்த திவ்யா சிறு பயத்துடன் இருந்த மாணவனைப் பார்த்து, “ஒரு பாட்டு பாடிட்டு போ” என்றாள்.
“எனக்கு பாட தெரியாதே”
“இங்க என்ன சூப்பர் சிங்கரா நடக்குது! சும்மா பாடுடா”
அவன் விசுவாசம் படத்தில் இருந்து ஒரு பாட்டை பாடினான். அவன் பாடிய அழகில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருந்தது.
திவ்யா, “சரி சரி.. போ” என்றதும் அவன் விட்டால் போதுமென்று ஓடினான்.
அடுத்து இயல்பாக இருந்த இருவரையும், “ரெண்டு பேரும் ஒரு டூயட் சாங்க்கு டான்ஸ் ஆடுங்க” என்றாள்.
இருவரும் முழிக்க திவ்யாவுடன் இருந்த ஒருவன், “ஐடம் சாங்க்கு ஆடுங்க” என்றான்.
திவ்யா, “டேய்!” என்று போலியாக மிரட்ட,
“சும்மா ஒரு ஜாலிக்கு தானே திவி” என்றான்.
“சரி பொழச்சு போ” என்றவள் அந்த மாணவர்களிடம், “ஹ்ம்ம்.. அவன் சொன்ன மாதிரி ஆடுங்க” என்றாள்.
ஒருவன், “நீங்களே பாட்டு சொல்லுங்க ப்ரோ” என்றான்.
நாடியை தடவியபடி யோசித்தவன் பிரியாணி திரைபடத்தில் இருந்து ‘மிஸிசிபி’ என்று தொடங்கும் பாடலை கைபேசியில் ஒலிக்க விட்டான்.
அந்த மாணவர்கள் ஆடத் தொடங்கவும் அவன், “டேய் ஒருத்தன் பையன் மாதிரி ஆடு” என்றான். ஏனெனில் இருவருமே அந்த பாடலில் ஆடிய நடிகையை போல் ஆடத் தொடங்கியிருந்தனர்.
அசடு வழிந்துவிட்டு, “நீ பையன் மாதிரி ஆடு” என்று இருவரும் ஒரே நேரத்தில் மற்றவனை கூற, மற்றவர்கள் சிரிக்க, பவித்ரா நெற்றியில் அடித்துக் கொண்டாள்.
பவித்ரா திவ்யா காதில், “ஏன்டி இந்த கொடுமையெல்லாம் என்னை பார்க்க வைக்கிற?” என்றாள்.
தில்லுடன் நின்றுக் கொண்டிருந்த மாணவனிடம் திவ்யா, “உன் பெயர் என்ன?”
“சஞ்சய்”
“அவனுங்க ஒரு முடிவுக்கு வரட்டும்.. நீ என்னச் செய்ற! அழகான மூனு சீனியர் பொண்ணுங்க கிட்ட பெயரை கேட்டுட்டு வா” என்றாள்.
அவன், “ஒரு சந்தேகம் கேட்கலாமா சீனியர்?”
அவன் கண்ணில் தெரிந்த சிரிப்பில் யோசனையுடன், “என்ன?” என்றாள்.
“அழகானனு சொன்னீங்களே! அப்படி யாரும் என்ன கண்ணுக்கு தெரியலையே!”
“நக்கலு!! போய் கேட்டுட்டு வா டா”
அவன் புன்னகையுடன், “என்ன சீனியர்! ஒரு ஐ லவ் யூ சொல்ல சொல்லுவீங்கனு பார்த்தேன்” என்று இழுக்க,
திவ்யா, “நேரம் டா! ஐ லவ் யூ சொல்றதுக்கு பதில், பெயரையும் இயரையும் கேட்டுட்டு ‘நீங்க ரொம்ப அட்டு பிகரா இருக்கிறீங்க’ னு சொல்லிட்டு வர.. நான் அவங்ககிட்ட கன்ஃபர்ம் பண்ணுவேன்”
அப்பொழுதும் அவன் அசராமல், “அப்படி செய்யலைனா என்ன செய்வீங்க சீனியர்?” என்று வினவினான்.
விஜய், “டேய் என்ன கொழுப்பா! எங்களை யாருன்னு நினைச்ச! பேட்ட படத்தில் வந்த டெரர் கங் போல!” என்றும்,
முதலில் பேசியவன், “இவ யாரு தெரியுமா! சேர்மன் ரிலேடிவ்” என்றான்.
அவனை கடுமையாக முறைத்த திவ்யா விஜய்யிடம், “நீ ஏன்டா நம்மளை வில்லன் ஆக்குற!” என்றாள்.
பின் சஞ்சய் பக்கம் திரும்பி, “நான் சேர்மன் ரிலேடிவ்வும் இல்ல.. நாங்க டெரர் கங்-கும் இல்ல.. சொன்னதை செய்யலைனா சின்னதா பனிஷ்மென்ட் தருவோம்”
“அதையும் செய்யலைனா?”
திவ்யா, “வனிதா மேம்” என்று கத்தி அழைத்தாள்.
சற்று தள்ளி சென்றுக் கொண்டிருந்த ஆசிரியை திரும்பி பார்த்தும், “இந்த சரீ உங்களுக்கு சூப்பரா இருக்குதாம்.. நம்ம சஞ்சய் சொல்றான்” என்றாள்.
அந்த ஆசிரியை முறைத்து விட்டு செல்ல, சஞ்சய் சிறு பயத்துடன், “ஏன் சீனியர்?” என்றான்.
பவித்ரா திவ்யா காதில் மெல்லிய குரலில், “மேம் உன்னைத் தான் முறைச்சிட்டு போனாங்கனு தெரியாம பயபுள்ள பயப்புடுதே!” என்றாள்.
திவ்யா புன்னகையுடன், “விடு விடு” என்றுவிட்டு சஞ்சயிடம், “நீ தான என்ன செய்வேன்னு கேட்ட! அதான், ஒரு சின்ன சாம்பிள்” என்றவள் ஆட சொன்ன மாணவர்களை பார்த்து, “இன்னுமாடா முடிவு செய்யலை! ஒரு பையனை மாதிரி ஆட இப்படி அடிச்சிகிறீங்களேடா!” என்றாள் சிரிப்புடன்.
சஞ்சய், “நான் பெயர் கேட்டுட்டு வரேன் சீனியர்” என்று நகர,
திவ்யா, “அட்டு பிகரை மறந்திராத”
“கண்டிப்பா சொல்லனுமா சீனியர்?”
“இவ்ளோ தானா உன் தில்லு! இவ்ளோ நேரம் கெத்தா நின்ன!”
“அது!”
“அட்டு பிகர்னும் சொல்லிட்டு வர”
“சரி சீனியர்” என்றபடி அவன் கிளம்பினான்.
அவன் கிளம்பியதும் அந்த மாணவர்கள் ஆடினர். அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.
அவர்கள் ஆடி முடித்ததும் திவ்யா, “உங்க பெயரென்ன? எந்த டிபார்ட்மென்ட்?”
இருவரும் பெயரையும் பிரிவையும் சொன்னதும் திவ்யா, “நல்ல ஆடுனீங்க.. காலேஜ் டே வரும் போது கூப்பிட தான் கேட்டேன்.. கிளம்புங்க” என்றாள். அப்பொழுது கன்னத்தில் கை வைத்தபடி சஞ்சய் வந்தான்.