மழைத்துளி -6.1

கம்பம்

காலை 8.50

வாசலில் இருந்து அலுவலகப் பகுதிக்கு நடக்கும் ஹ்ருதயாவின் காலடி சத்தம், மெதுவாகவே ஆயினும், ஓரளவு உற்சாகத்தோடு கூடியது.

அவளுடைய முகத்தில் வழக்கமான புன்னகை ஒளிர, மனதுக்குள் ஒரு புதுமை உணர்ச்சி…

புதிய இடம்… புதிய மனிதர்கள்… ஆனாலும் ஏதோ ஓர் அடையாளமில்லாத நெருக்கம் அவளுக்குள் பதிந்து மனதை வருடுகிறது.அலுவலக வாசலில் இருந்தவரும், தொழிலாளர்களும், பழக ஆரம்பித்து விட்டனர்.

ஒருவிதமான மரியாதை கலந்த சிரிப்புகள், அவள் நடையில் நிம்மதியூட்டின.ரிசப்ஷனில் அமர்ந்திருக்கும் சின்னக்குட்டி,

“என்ன அக்கா, கரெக்ட் டைம்முக்கு வந்துட்டீங்க… சாமி! வாட்ச் கூட உங்களை பின் தொடரணும் போல சிரித்துக்கொண்டே கிசுகிசுத்தாள்.

ஹிர்தயா “லேட் ஆச்சுனா, பாஸ் கொஞ்சம் கோவப்படுவாங்கல அதான்.. டைமிங் கீப் அப் பண்ணா நல்லது தானே “

அவள் ஒரு பக்கம் வருகை தாள் சரி பார்த்து விட்டு, அடுத்து ஏற்கனவே schedule பண்ண கொள்முதல் குழுவோடு மீட்டிங்கை ஆரம்பிக்க சென்றாள் .

கொள்முதல் குழு என்பது ஒரு நிறுவனத்திற்குத் தேவையான சேவைகள் மற்றும் பொருட்களைப் பெறுவதாகும். அதே நேரத்தில் செலவு-செயல்திறன் மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.

இதில் சந்தை பகுப்பாய்வு, சப்ளையர் தேர்வு, பேச்சுவார்த்தை, ஒப்பந்த மேலாண்மை மற்றும் சரக்குக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடங்கும்.

அவளுக்கு தெரியாமலேயே, பார்வையாளர் காத்திருக்கும் அறையில் இருந்த சூர்யா, கவனமில்லாத கண்ணோட்டத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

………

மதிய உணவுக்குப் பின்பு, ஃபேக்டரியின் ஓரமாய் அமைந்திருந்த ஒபென்ஷெடில், ஒரு பக்கமாக நிழலைக் கொடுத்த பனைமரம் சுற்றி அமர ஏதுவாக கட்டப்பட்ட சிமெண்ட் தரையில் நால்வரும் அமர்ந்தனர்.

சூர்யா, ஹ்ருதயா, சந்தோஷ், கார்த்திக். வெயில் சற்று சோர்ந்திருந்தாலும், அந்த இடத்தில் பசுமை வாசனை கலந்து ஒரு நிம்மதி பரவிக்கொண்டிருந்தது.

சந்தோஷ், கார்த்தி தோளில் தலை சாய்த்தபடி சூர்யாவை நோக்கி ,

“சூர்யா அண்ணா, இன்னைக்கு வேற ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?”

சூர்யா சிரித்தபடி திரும்பி, “யாரு கேட்டா. நீ இப்படிலா கேக்குற ஆள் இல்லையே. எதாவது சந்தேகம் கேட்க போறியா என்ன?” என்றான்.

சந்தோஷ் கைத்தட்டியபடி, “என்ன பாத்து என்ன வார்த்த கேட்டுட்டீங்கனா , இங்க லோக்கல் ஏரியா சுத்தி பாக்கலாம்னு தோணுது அதான் கேட்டேன்.

ஹ்ருதயா அக்காவும் இப்போ வர எங்கும் போல, எதாவது peaceful இடம் இருந்தா நம்ம chill பண்ணலாம்னு…”

ஹ்ருதயாவும் சம்மதமாக சிரித்தாள். “சரி தான். ஃபேக்டரி, வேலை, வீடு இப்படியே போது… கொஞ்சம் சுத்திப்பாக்கலாம். பயணங்கள் தான் மனசுக்கு சுறுசுறுப்பா இருக்கும்.”

சூர்யா ஒப்புக் கொண்டு. “ஓகே, நா உள்ள போயி மீட்டிங் வேற எதுனா இருக்கானு பார்த்துட்டு, மேனேஜர்கிட்ட சொல்லிட்டு வரேன். நீங்க எங்க போறதுன்னு முடிவு பண்ணி வைங்க.”

சூர்யா உள்ளே சென்றதும், சந்தோஷ் கார்த்திகை நோக்கி,“ கார்த்தி அண்ணா, நீயும் வர. நாம வெளிய போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு. சுத்தி பார்க்க போலாம்.”

கார்த்திக் சற்று யோசனை பண்ணி சூர்யாவிடம் , “மச்சான், இங்க பக்கத்துல ‘கோடி லிங்கம்’ கோவில் இருக்கு. பசுமையான சூழல் மற்றும் மலைகளுக்கு மத்தியில் இருக்கும். காட்டு வாசல்… அங்கிருந்து நம்ம எப்பவும் போற டீக்கடை அப்படியே அங்க போய் ஒரு attendance போட்டுட்டு வரலாம்.இப்போ இந்த கிளைமேட் இன்னும் நல்லா இருக்கும்.

“Done!” என்று சந்தோஷ் ஆட்டம் காட்ட, ஹ்ருதயா நன்றாக சிரித்தாள்.

அந்த நால்வரும் மெதுவாக plan பண்ணிக் கொண்டிருந்தபோது, பின்புறத்தில் வானம் மெதுவாக மேகம் கொண்டு சூரிய ஒளியை மறைத்தது. காற்றில் இயற்கையின் வாசனை.

அந்த சின்ன நிகழ்வுகளும்… பெரும் நினைவுகளாய் பதியப்போகின்றது என்பதை யாரும் அறியவில்லை

………..

error: Content is protected !!