மழைத்துளி -1


மழைத்துளி -1

Epi 1- மழைத்துளி மேலெழுந்த சூரியன்

தெற்குத் தமிழகத்தின் மழைமுகிலும் மலைமுகிலும் பிறந்ததொரு சாந்தமான இடம் கம்பம். கம்பத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், சுருளி அருவியிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமையான அமைதியான , மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் நெல் வயல்களால் சூழப்பட்டு மேற்கே சுருளி அருவியின் தெளிவான நீர் ,பாய்ந்தோட, பன்னீர் திராட்சைகளின் தோட்டங்கள் சூழ மண் மணம் மாறாத சிற்றூர் சுருளிபட்டி.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் பசுமையால் புனைந்த சேலை போல் விரிந்திருந்தது. காலையில் பனித்துளி விழும் காடுகளும், மாலையில் கார்மேகங்கள் சுற்றி நடக்கும் தேயிலை தோட்டங்களும், இதையெல்லாம் பசிக்கூறும் கண்களால் அனுபவிக்க முடியும்.

இங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வரலாறு இருக்கிறது.ஒவ்வொரு தெருவிலும் ஒரு மரியாதை கதை ஓடிக்கொண்டே இருக்கிறது.கம்பம் மக்களுக்கு மண் மேலான மதிப்பு உண்டு.அங்கே பிறந்தவன் மட்டுமல்ல, அங்கே வாழ்ந்தவன் கூட குடும்பம் போலவே கருதப்படுகிறான். அப்படி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்து வரும் பல குடும்பங்களுக்கு நடுவில் , கம்பீரமாய் வீற்றிருக்கும் பாரம்பரிய வீடு.

நம் தென் தமிழ் நாட்டு மரபுக்கே உரிய இயற்கையோடு இசைவாக, குடும்பத்தைச் சுற்றி மையமாக, மண் வாசனை கலந்த கட்டிட கலையோடு இருக்கும். மஞ்சள் மண்ணில் சன்னல் தோரணங்கள் குலுங்கும் ஓர் அழகான வீடு. நகரம் வளர்ந்தாலும், இது இன்னும் கிராமத்-தேன் வாசனையோடு திகழும்.

வீட்டு வாசலில் பெரிய ரங்கோலி இடப்பட்டு அதில் அழகாய் மஞ்சள் பூசணி பூ வைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் சுற்றி பெரிய மதில்சுவர் . இளைப்பாற ஏதுவாய் சிமெண்ட் பெஞ்ச். ஒருபுறம் பைபர் சாய்ந்த முருங்கை மரம், மறுபுறம் செம்பருத்தி மற்றும் துளசியுடன் கூடிய சிறிய பூந்தோட்டம். வாசல் நுழைவாயிலில் பெரிய மரக்கதவு. அதன் மேலே மரத்தாலான சிறிய ஜன்னல் மாதிரி ஓர் அழகான அலங்காரம். வீட்டு முந்திரிக் கட்டில் மாதிரி உயரமாக இருக்கும் முன்றில், வீட்டுக்குள் நுழைந்ததும், வலப்பக்கமாக பாட்டியின் மண் அடுப்புடனான இப்போதைய புதுவடிவ சமையலறை கூடம்– சுவையில் நேசம் கலந்து பேசும் இடம். 11 பேர் அமர்ந்து உண்ண கூடிய சாப்பாட்டு மேஜையுடன் சேர்ந்த சமையலறை, நல்ல விசாலமான பூஜை அறை, 2 படுக்கையறை , நடுவில் திறந்தவெளி முற்றம், இடப்பக்கம் தாத்தா படிக்கும் “தி இந்து” பத்திரிகை மேசை, அதன் அருகே படுக்கை அறை.

மேலே முதல் மாடியில் 3 படுக்கையறைகள். ஒரு மாஸ்டர் பெட்ரூம் ஹீரோவுக்கானது, அதுக்கும் மேல மாடி, அதுல பலவிதமான ரோஜா செடிகள், முல்லைப்பூ பந்தல், அலோவேரா, மலபார் கீரை, அவரைக்கொடி , பலவகை ரோஜா செடிகள்.. இந்த வீடுதான் மொத்த குடும்பத்தின் இதயம். ஹால் சுவரில் சூர்யாவின் MBA பட்டம், அம்மாவின் பழைய வீணை, அப்பாவின் பசுமை வேளாண்மை விருதுகள் எல்லாம் ஒட்டப்பட்டிருக்கும்.

வீட்டின் பின்புறத்தில் grape vines – திராட்சை கொடிகள்! இது தான் குடும்ப பிஸினஸின் அடையாளம்.ஒரு பக்கம் கிணறு, மற்றொரு பக்கம் பசுக்களும் அதன் குட்டிகளுடன் கொஞ்சிக்கொள்வதை பார்க்க கண்ணிரேண்டும் போதாது. அதற்கு பக்கத்தில் சின்ன கூண்டில் நாட்டுக்கோழிகளும் இணை சேர்கின்றன .

எதிரே சிறுதோட்டம் அதில் வீட்டுக்கு தேவையான சிறுகீரை , அரைக்கீரை, பாலக்கரை, பொன்னாங்கண்ணி கீரை, வாழை 🌳, தென்னை🌴, காய்கள் like கத்திரிக்காய் brinjl🍆 வெண்டை, அவரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, பீன்ஸ் 🫛, சுண்டக்காய், தக்காளி🍅, மிளகாய்🌶️மூலிகை செடி like பிரண்டை , தூதுவளை, கற்பூரவல்லி, செம்பருத்தி, சாமந்தி, பிச்சி பூ போன்றவைகள் இருக்கின்றன

இது தான் நம் கதையின் நாயகன் சூர்யா, அவன் குடும்பத்துடன் வாழும் வீடு. தந்தை மரபில் பிழைத்தெடுத்த வழியை, தன் கனவுகளால் செழிக்க வைத்தவன்.தாத்தா பெரியசாமி – வீட்டின் நிழல். மரபையும் பயிரையும் சமமாக முன்னோக்கிச் சிந்திப்பவர். பாட்டி அமிர்தவல்லி, பெயரை போலவே அமிர்தமாய் சமைப்பார். அவரின் கைப்பக்குவத்திற்கு அவர்கள் வீட்டு கன்னுக்குட்டி வரை அடிமை. இவர்களுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று.

பெண் புஷ்பாவள்ளி, வண்டிபெரியாரில் உள்ள மதுவண்ணனுடன் திருமண முடிந்து வாழ்கிறார். அவருக்கு 2 மகன்கள்.

மகன் சந்திரசேகர் – ஒழுக்கமும் நம்பிக்கையும் நிறைந்தவர்.அவர் மனைவி ரமேஷ்வரி – ருசிகரமான சாமான்கள் மட்டுமல்ல, சந்தோஷமா குடும்பத்தையும் சமாளிக்கிறவர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், மூத்தவன் சூர்யா.

அடுத்து அனிருத் – யுஜி இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறான். சில் பாய், தளபதி விசிறி. ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குற அளவுக்கு. பைக் மோகம், அம்மாவோட ஃபேவரிட். கடைக்குட்டி காவ்யா – +2 படிக்குற தைரியமான பொண்ணு. சுட்டி தனம் நிறைந்த பொண்ணு .. சூர்யாக்கு செல்ல தங்கை

( அடடா, நீங்க சொல்றது கேட்குது . எங்க ஹீரோ சார கண்ணுல காட்டலனு )

புல்லட் ஓசையோடு கம்பம் வீதியைக் கடந்து வந்த 6 அடி உயரம், பரந்த தோள்கள், வேலைக்குப் பிறகும் வாடாத அதிரடியான நுட்பம் உடைய உடல் கட்டமைப்பு… வெறும் பார்வையிலேயே பலரையும் மயக்க வைக்கும் அந்த புன்னகை – அதுதான் சூர்யா.MBA முடிச்சிருக்கான்.

மேல் தாடையில் சிறு துணிச்சலோடு வளர்ந்த தாடி, கறுப்பு நிறத்தில் ததும்பும் கண்கள், தன்னம்பிக்கையோடு திகழும் நடை, சாமான்ய கம்பம் மக்களிடையே கூட அவனுக்கு ஒரு தனி மரியாதை உருவாக்கியிருந்தது, எப்போதும் நீட்டான checked சட்டையும் rugged jeans-ம் – அவனோட signature look.

வலது கையில் இருக்கும் பிரேஸ்லெட், புல்லட் கீயுடன் ஒலி கொடுக்கும் போது, அந்த ஒலியோட அவனது வருகையும் அறிவிக்கப்படும்.

(எப்படி நம்ம ஹீரோ சார் இன்ட்ரா ஒகே வா)

சூர்யாவோட தாத்தா திராட்சை தோட்டம் ஆரம்பிச்சு, வியாபாரம் செய்து வந்தார். அத சூர்யாவோட அப்பா அத மொத்த விற்பனையா பக்கத்து மாநிலத்துக்கும் பண்ணிட்டு இருந்தாரு.இப்போ சூர்யாவோடா புது புது ஐடியால சந்தைப்படுத்தல், குளிர்பதன சேமிப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான/சர்வதேச தளவாடங்கள்-ஐ சேர்த்து பண்ணி “Grapes Export King of South” அப்படின்னு ஒரு கோட்டை கட்டிவிட்டான் .

தொழிற்சாலைக்கு புதிய இயந்திரங்கள், ஏற்றுமதி திட்டங்கள், பிராண்ட் மதிப்பு – எல்லாம் அவனால தான் நிறைய சாத்தியம்.. எவ்வளவோ புது டெக்னாலஜி கொண்டு வந்தாலும் அவனோட ஃபேமிலி, நம்ம ஊர், மண், கலாச்சாரம் மறக்காம அதனோடு கலந்து கொண்டிருக்கிறான்.

அது ஒரு அழகிய இளவேனில் காலம் திங்கட்கிழமை காலை 7 மணி…..

சூர்யா தன் ஃபேக்டரியில் உள்ள வேலைகளை கவனிக்க , கிரேப்சு எக்ஸ்போர்ட்கு தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு கிரேட்-ஐயும் சரிபார்த்து, மேனேஜரிடம் ஒப்படைத்துவிட்டு வண்டியில் நண்பன் கார்த்தியோடு வீட்டுக்கு வாரன். அதே நேரத்தில் வீட்டில், அனிருத் பாத்ரூமில் “ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே. வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே. வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே. வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே. வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம். வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம். தமிழாலே ஒண்ணானோம். மாறாது எந்நாளும்”

பாடிட்டே லேட் பண்ண, காவ்யா வெளியில “டேய், எரும சத்தம் போடாதடா ! பாட்டுறேனு பேர்பண்ணிட்டு ஏன்டா எங்க காதுல ரத்தம் வர வைக்ற , முடியலடா உன்னோட, நீ கத்துறதுக்கு நம்ம வீட்டு மாடே தேவலயா இருக்கு. ஸ்கூலுக்கு லேட் ஆகுது, சீக்கிரமா குளிச்சிட்டு வந்து சேரு.

அனிருத்,” நீயெல்லா ஒரு தங்கச்சி, ஒரு வருங்கால சிங்கர பாத்து எப்டி பேசுற, வெட்கம் வேதனை துக்கம் துயரம்,ஒருநாள் இல்ல ஒரு நாள் நா பெரியாள வருவேன், அப்போ அண்ணா அண்ணானு வா உன்ன பேசுகிறேன்.” அப்போ சூர்யா கூட உள்ளவந்த கார்த்திக் இவன்ல college-ku போறானு தெரியல, இல்ல singing show-க்கு போறானு தெரியல!

காவ்யா” அண்ணா ஃபேக்டரி ஹேண்டில் பண்ணுறத விட, இவன ஹேண்டில் பண்ணுறதுக்கே நீ பிசினஸ் கிளாஸ் போகலாம்!

அம்மா ராமேஷ்வரி , ” ஆமா ஆமா ,நீங்க இரண்டு பேரும் ஒன்னா இருந்தா, நான் ஹாஸ்பிடல தான் ஒரு பெட் ரெடிபண்ணி வெச்சிகணும் போல இருக்கு. ஒழுங்கா சாப்ட்டு ஸ்கூல் காலேஜ் கிளம்புற வழிய பாருங்க.. டெய்லி இதே போராட்டம். நேரதோட எழுந்து கெளம்பனும்னு சொன்ன ஒருத்தரும் காதுல போட்டுக்ரது இல்ல… ராத்திரி எல்லா போன நொண்டிட்டு இருக்கவேண்டியது.

அப்ப சூர்யா போன் வரவும் ஃபேக்டரி பற்றி பேசிட்டே வெளிவரண்டாகு நடக்றான் அப்பா சந்திர சேகரோ, நேர ஒன்னும் சொல்லாம “சீக்கிரமா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்.. வேலை வேலனு ஓடிட்டு இருக்கான்”

————-

பாலக்காடு, கேரளா பக்கத்துல ஒரு சின்ன கிராமம்.

பசுமை சுவரோட சாய்ந்துவந்த பளிச்சுன்னு தேய்ந்த சூரிய ஒளி, பழைய நரிக்காலி வாசலில் நுழைந்தது. அந்த ஒளி, ஒரு மெலிதான நிழலோட சேர்ந்து, தலையில் விழும் போது, கட்டிலில் புரண்டபடி விழிக்கும் அவளது கண்களில் வானம் மிதக்கும் மாதிரி இருந்தது.

அவள் பேரு ஹ்ருதயா.

மழைக்கால சேனைமண் போல நிறம். தீண்டாமலே பேசும் பழுப்பு நிற கண்கள். அழுத்தமான குரல் இல்ல, ஆனா ஒரு இயற்கையான அழகு.சிரிப்பு வந்தா, அந்த ஊரே குளிர்ந்தது போல ஃபீல் ஆகும்.நீண்ட மென்மையான முடி சாய்ந்திருந்தது அவளது தோள்களை மிதமாய்க் கடக்க. பஞ்சு மாதிரி மென்மையான கால்களில் அதைத் தாண்டி, ஒவ்வொரு அடியிலும் இசை போல கொலுசு சிணுங்க வாசலில் வந்து நின்றாள்.

வீட்டின் முன் பூந்தோட்டம் – தூளிக்கிழங்கு, துளசிக்கொடி, ஜாதிக்காய் மரம்… ஒரு வகை சொர்க்கம் போலவே!

லக்ஷ்மி டீச்சர், பாலக்காடு அரசு பள்ளி ஆசிரியர். இயற்கையிலே அழகானவர் . எளிமையான இளகிய மணம் கொண்டவர் .

அவளது அம்மா, வெளிவரண்டாவில் இருக்க, கையில கோப்பை.“ஹ்ருதய… காபி கழிக்கோ?”

அவள், சிறு சிரிப்புடன் முன்னே வந்தாள்.“வேண்டா அம்மே ஞான் காபி கழிச்சு. எனிக்கு போகன் , ஞான் தயாரணு சமயமாயி” .

அம்மா மெதுவா ஆதுரமாய் பார்த்தாள். “இ ஊரில் நினக்கு சுகம் கிட்டத்தே என்னு ஞான் பிரதிக்குன்னு”

அப்பா பாஸ்கரன் , அவளது பொதி பைகளை கொண்டு போய் காரில் வைத்து, ” ஹ்ருதயா… அவிடே போயி ஏதும் புதியது எந்தெங்கிலும் பரீக்சிச்சு நோக்கு, மனச எப்பொழும் பிரஷ்ஆயி இரிக்கட்டும் “…

மெதுவாக சிரித்து விடைபெற்றாள். ஹ்ருதயா, அந்த வீட்டின் வாசலை தாண்டும் போதே, மனசு சொன்னது (இதயத்தில் ஏதோ புதுசா தோணுது)

மாலை 4.30 மணி …

சந்திரசேகர் தங்கை புஷவல்லியுடன் போனில் பேசிவிட்டு உள்ளே சென்று மனைவியிடம் “அவங்க வீட்ல சொன்ன மாதிரி நாளைக்கு வந்துடுவாங்களாம்… குடிநீர், சாப்பாடு ரெடி பண்ணிடு” என்கிறார்.

————–

எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூரிருக்கும் கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூரியனில் செடி முளைக்கும் புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்….!!—————-

error: Content is protected !!