நட்சத்திர விழிகளிலே வானவில் – 6 (1)

  6 மணிக்கு கண்விழித்தவன் குளித்து முடித்து கிளம்பி வந்தான். அசையாமல் படுத்திருந்த நந்தினியை கண்டு நிதானமாக அவளது முகவடிவை ஆராய்ந்தவன்,

“முதல் முதல்ல பார்த்தப்போ எப்படி இருந்தா?… தக்காளிக்கு வால் முளைச்சதாட்டம் ரெட்டை ஜடை போட்டுட்டு இருந்தவ. ம்ம் இவ்வளோ நாள்ல எவ்வளோ மாற்றம் இவ கிட்ட?…” என நினைத்தபடியே அவளை மெல்ல எழுப்பினான்.

அதற்கே, “அப்பா முழிச்சிட்டேன்!….” என பதட்டமாக அலறியடித்து எழுந்தவளை கண்டதும் பரிதாபமாக போயிற்று.

“ஹே, எதுக்கு இந்த அவசரம் நான் தான்!…” என்று ஆசுவாசப்படுத்தினான்.

“சாரிங்க அப்பான்னு நினச்சு……….” அவள் இழுத்த விதத்தில் சிரித்தவன்,

“சரியான பயந்தாங்கோலி!..” என அவளது தலையில் இரண்டு தட்டு தட்டி, “நீ போய் குளிச்சிட்டு வா, நான் கீழே இருக்கேன்!..” என கூறிவிட்டு அவளுக்கு தேவையானதை எடுத்துவைத்தவாறே,

“டேய் உதயா உனக்கு எல்லாமே உல்ட்டாவா நடக்குதுடா, இதையெல்லாம் உன் பொண்டாட்டி உனக்கு செய்யனும், ஹ்ம் நீ அவளுக்கு செய்யற? நாளைய வரலாறு உன்னை ரொம்ம்ம்ம்ப பெருமையா பேசும்டா?…” என தன்னையே மெச்சியவாறே செய்து முடித்தவன் கதவை தட்டும் ஓசை கேட்டதும்,

அதுவரைக்கும் அவன் செய்பவை அனைத்தையும் பார்த்துக்  கொண்டிருந்தவளிடம் திரும்பி, “காபி கொண்டு வந்திருப்பாங்க. நந்தினி நீ போய் கதைவை திறந்து வாங்கிட்டு வா!…” என சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்.

உதவிப்பெண் காபி ட்ரேயோடு நிற்கவும் வாங்கிகொண்டு நன்றி செலுத்திவிட்டு உள்ளே வந்தாள்.

“போய் ப்ரெஷ் பண்ணிட்டு முகம் கழுவிட்டு வா!…”

சொன்னபடி செய்துவிட்டு வந்தவளிடம் முதலில் குடிக்க தண்ணீர் தந்தவன் குடித்து முடிக்கவும் காபி கப்பை குடுத்து ப்ரெட் ஆம்லேட் ப்ளேட்டையும் நகர்த்தினான்.

“இதையும்  சாப்ட்டுட்டே காபி குடி நல்லா இருக்கும்!…”

“ம்ம்!…”

“எதுக்கு முதல்ல தண்ணி குடுத்தேன்னு கேட்கமாட்டியா?…” என்றவன் அவள் கேட்கும் முன்னமே,

“எப்போவுமே காலையில் எழுந்ததும் மட்டுமில்லை சாப்பிடுவதற்கு முன்பும் கொஞ்சம் தண்ணீர் குடிக்கிறது நல்லது, அதுக்குத்தான்!..” என்றான்.

“ஓ!…” ஒற்றை வார்த்தையில் என்றவளை பார்த்தவன் இன்னும் தூக்கம் தெளியலை போல என நினைத்தான்.

“சரி சீக்கிரமா இதை முடிச்சுட்டு குளிச்சிட்டு கீழே வா!…” என்று கிளம்ப எத்தனிக்க,

“தனியா வரணுமா?…” இவ்வளோ பெரிய அறையில் தனியாக இருக்கவேண்டுமே என அஞ்சியபடி கேட்க,

“அதுக்குன்னு துணைக்கு ஆளையா அப்பாயின்ட் பண்ணமுடியும்?…” என்று  இடக்காக கேட்கவும் மௌனமானவளை எழுப்பி தன்னருகில் நிறுத்தியவன்,

“இங்க பாரு நந்து, ஒவ்வொரு நாளும் உனக்கு துணைக்கு நான் வந்துட்டே இருக்க முடியுமா? நீயே பழகிக்கோமா!…” என்றான்.

“எல்லா நாளும் இல்லை. இப்போ மட்டும் ப்ளீஸ்ங்க!…” என அவனை நிமிர்ந்து பார்த்து கெஞ்சியவளை கண்டு மனம் உல்லாசமாக கொஞ்சம் கலாட்டா செய்தால் என்ன என்ற எண்ணம் மேலோங்கியது.

“அப்படியா?… இருக்கனுமா?…” என மிக அருகில் நின்று உதயா கேட்க அவளோ அவனது நெருக்கத்தை உணராமல் கீழே தனியாக போக சங்கடப்பட்டு அவனை இருத்திவைக்க பார்த்தாள்.

உதயாவோ, “ம்ம்ம்!..” என்ற அவளது தலையாட்டலில் வசமாக சிக்கபோகிறாள் என நினைத்து,

“நல்லா யோசிச்சிக்கோ, அப்புறம் நான் நீ போக சொன்னாலும் போக மாட்டேன்!…” என வார்த்தையில் விஷமம் வழிய கூற அவனை யோசனையாக பார்த்தாள்.

“என்னடா இது, நான் துணைக்குத்தானே இருக்க சொன்னேன். இவங்க பார்வையும் பேச்சும் சரியில்லையே ஏதும் வில்லங்கம் இருக்குமோ?….” என நகத்தை கடித்தபடி சிந்தித்தநேரத்தில் அவளது இதழ்களிலிருந்த விரலை விடுவித்து அந்த கையை பற்றியவன் விரல்களை நீவி விட்டவாறே மீண்டும்,

“நிற்கட்டுமா? போகட்டுமா? …என ராகம் இழுத்தவனை பார்த்து அவனது நெருக்கத்தை உணர்ந்து அதிர்ந்து விலகினாள்.

“சரி நீங்க, நீங்க கிளம்புங்க!…” என்றாள் அவசரமாக.

“என்ன நந்துகுட்டி இப்டி சொல்லிட்ட உனக்கு தனியா கீழ வர பயமாச்சே!…” அவள் பாட்டை அவளுக்கே திருப்பி படித்தான்.

எதற்கு வம்பு என்று, “அதெல்லாம் வந்திடுவேன்!…”

“நம்பலாமா?..”

“ம்ம்!…” என்றாள் பலமாக தலையசைத்து இதுக்குமேலே கேட்காதே என்னும் பாவனையில்.

“ம்ம் சுதாரிச்சுட்ட, பார்த்துக்கலாம்!…” என்று கண்கள் சிரிக்க சொல்லிவிட்டு சென்றான்.

கீழே அவன் கண்ட காட்சி கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

“இல்லை இல்லை நான் தான் ஜெயிச்சேன்!…..” என்ற நாச்சியின் குரல் வீட்டையே அதிரவைத்தது.

“அதெல்லாம் இல்லை பாட்டி ஜெயிச்சது நானே நான் நான் மட்டுமே!…” என்றாள் கெளரி நாச்சிக்கு போட்டியாக கத்திக்கொண்டு.

“அடியே கெளரி கழுதை, அதான் நான் சொல்றேன்ல நான் தான் ஜெயிச்சேன்னு?…”

“அதெப்படி கிழவி நீ ஜெயிக்க முடியும்? நான் சொன்னது போல தான் அண்ணா அண்ணியை கூட்டிட்டு வந்தாங்க, அப்போ நான் தானே ஜெயிச்சேன்!…” என தன் சொல்தான் ஜெயித்தது என்ற இறுமாப்பில் கெளரி ஆட,

“இந்த சின்னபுள்ளைகிட்ட கூட நம்ம பேச்சு எடுபடமாட்டேங்குதே?..” என்று வெம்பிகொண்டிருந்தார் நாச்சி.

“இந்தா பாரு கிழவி நான் என்ன சொன்னேன்?…”

“அதையும் நீயே சொல்லு!…” என்றார் வெடுக்கென்று.

அதையெல்லாம் கண்டுகொள்ளாத கெளரி, “அண்ணா அந்த மண்டபத்துக்கு போனதுமே மதியண்ணா போன்ல நமக்கு தகவலையும் சொல்லி அவங்களை போட்டோ புடிச்சு எனக்கு அனுப்பிட்டாரு!…”

“அதுதான் எனக்கும் தெரியுமே?…” என்றார் நொடித்தபடி.

“அப்போ நான் என்ன சொன்னேன்? அண்ணா கண்டிப்பா அண்ணிக்கு மறுபடியும் தாலிகட்டி இங்க கூட்டிட்டு வந்திருவாருன்னு சொன்னேன்ல?….” என்றவள் நாச்சி ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை பேசவிடாமல்,

“ஆனா நீ தான் இல்லை இல்லை என் பேரன் ஏற்கனவே தாலி கட்டிட்டான். அதனால இங்க கூட்டிட்டு வந்து நம்ம முன்னால நம்ம பர்மிஷனோட மறுபடியும் கல்யாணம் பண்ணுவான்னு சொல்லி என் கிட்ட நூறு ரூபாய்க்கு பெட் கட்டின!…” என சீண்டவும்,

உதயாவுக்கோ பொறுமை எல்லை மீறியது. நம்மை வச்சு இதுக ரெண்டும் இப்படி பந்தாடி இருக்கிறாங்கலே என்று. 

“ஆமாடி இப்போ அதுக்கென்ன? ஆனா நான் சொன்னதுல பாதி ஜெயிச்சுட்டேன்ல?…”என்றார் இறுமாப்பாக.

“என்னத்தை ஜெயிச்ச?…” எனு கெளரி நொடிக்க,

“பொண்ணை இங்க கூட்டிட்டு வருவான்னு சொன்னேன்ல? அதான். அதனால நானும் பாதி ஜெயிச்சேன்னு நீ ஒத்துக்கோ!…” என்றதும் அவரை அல்பமாக பார்த்தபடி,

அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பாக்கியத்திடம் திரும்பி, “பாக்கிம்மா இத்தனை வருஷம் எப்படிதான் இது கிட்ட குப்பைகொட்டுன நீ?…” என அவரையும் வம்பிழுத்த நேரம்,

“அடிங்க, நான் அங்க நேத்து என்ன மாதிரி நிலைமையில இருந்தா, நீங்க என்னடான்னா என்னோட வாழ்க்கையை பெட்டுகட்டி ஏலம் விட்டு விளையாடிட்டு இருந்திருக்கீங்களே?…” என விரட்ட ஆரம்பிக்க,

கெளரியோ தலைதெறிக்க ஓடி ஒளிந்தாள். சிக்கியது நாச்சியே. அவரால் வேகமாக ஓடமுடியாமல் உதயாவிடம் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் தவித்தார்.

“ஆத்தீ, ராசா என்னை உட்டுடு என்னால ஓடமுடியலையே?… இந்த கெளரி கழுத என்னையவும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல….” என கௌரியை திட்டியவாறே சோபாவை சுத்திகொண்டு இருந்தார் அவனது கைக்கு அகப்படாமல் இருக்க பெரும் பிரயத்தனபட்டபடி.

“ஏய் கிழவி இன்னைக்கு உன் காதுல இருக்கிற தண்டட்டியை நான் கைய்யோட பிச்சுபோடாம விடவே மாட்டேன்!…” என்றான். அவனும் கிழவிக்கு ஆட்டம் காட்டிக்கொண்டே.

error: Content is protected !!