வெளியூர் சென்றிருந்தவன் உதயாவின் திருமணத் தகவலை கேட்டதும் கிளம்பி ஊருக்குள் வருவதற்கும் வரவேற்பு தொடங்குவதற்கும் சரியாக இருந்தமையால் வெளியே உள்ள ஆட்களை கவனித்துகொள்ளும் பொறுப்பை மட்டுமே ஏற்றிருந்தான்.
சாப்பாட்டு அறைக்கு சற்றுமுன்னரே சாப்பிட வந்தவனை வரவேற்ற அவல்கேசரியை ஆசையாக கண்டு அமரப்போனவனை,
நாச்சி, “இந்தா விஷ்ணு பந்தியை கவனிப்பா அங்கே யாருக்கு என்ன வேணும்ன்னு கேட்டு பரிமாறு!…” என அவனது கையில் கேசரி பாத்திரத்தை எடுத்து திணிக்கவும் நொந்தேவிட்டான்.
“இதென்ன சோதனை? இதுதான் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலைன்னு சொல்றதா?…” புலம்பியவாறே ஒவ்வொருத்தர் இலையிலும் வைத்தபடியே.
கிழவி அசந்தநேரமாக பார்த்து ஒருகேசரி கிண்ணத்தோடு ஒதுங்க நினைத்த நேரம், “விஷ்ணு அதென்ன அதையே கைல வச்சிட்டு காவல் காத்துகிட்டு இருக்க?…”
“இதோ வரேன் பாட்டி!..”கிண்ணத்தை வைத்துவிட்டு வந்தவனிடம்,
“இங்க வந்து சாம்பார் ஊத்து. நம்ம வீட்டு விசேஷம் நாம தான நல்லா கவனிக்கணும்!…” என சொல்லிவிட்டு அங்கேயே நின்ற கிழவியை கொதிக்கும் சாம்பார் குண்டாவில் முக்கியெடுத்தால் என்ன என்று ஆத்திரம் கிளம்பியது.
எல்லாம் முடித்து, ”ஹப்பா இனிமே சாப்பிடலாம்!…” என ஆசுவாசப்பட்டு நிமிரவும் உதயா தம்பதியர் வரவும் சரியாக இருந்து.
விஷ்ணுவிற்கு பின்னந்தலையில் யாரோ சடாரென அடித்த உணர்வு.
“கொசுவத்தி சுருள் மொத்தமும் முடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு மச்சான். சீக்கிரமா இருக்கிறதையாச்சு சாப்பிட்டு முடிக்கிறியா?…” என்றபடி எழுந்து நந்தினியோடு கிளம்பிவிட்டான்.
“உன்னோடு சேர்ந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்!…” என்று பல் இடுக்கிற்குள் வார்த்தைகளை கோவமாக கடித்து துப்பியபடி.
“எனக்கும் நீ போதும் போதும்னு சொல்ற வரைக்கும் குடுக்கத்தான் ஆசை என்ன செய்ய? சாப்பாடு எல்லாம் தீர்ந்து போச்சு மச்சி, அதனால அடம்புடிக்காம இருக்கிறதை காலிபண்ணிட்டு வா. வெளில இருக்கோம் வீட்டுக்கு கிளம்ப நேரம் ஆச்சு!…” என சொல்லிவிட்டு நகர்ந்தவனை விஷ்ணுவின் குரல் தொடர்ந்தது.
“உன் கூட வீட்டுக்கு நான் வரமாட்டேன்!…” என அடம்பிடித்தவனிடம்,
“அப்போ அப்பா கார்ல வா!…” என்று கூறி வெளியேறிவிட்டான் சாப்பாட்டு அறையை விட்டு.
“எல்லாம் இவன் முடிவு, போகலைனா அதுக்கும் எதாச்சு பண்ணி வைப்பான்!…” என்று இருக்கிறதை சாப்பிட ஆரம்பித்தான்.
கையை கழுவிக்கொண்டு வெளியே வந்தவனை கிருஷ்ணமூர்த்தி அழைத்து, “விஷ்ணு எல்லோருக்கும் செட்டில் பண்ணியாச்சுப்பா கிளம்பலாம் தானே?…” என்றார்.
“நீங்க கிளம்புங்கப்பா நானும் கிளம்பறேன்!…” என்றவனை முறைத்த பாக்கியம்,
“அண்ணாவும் அண்ணியும் இன்னும் ஊர்ல இருந்து வரலையே அப்புறம் என்னவாம்? வீட்ல தனியா இருப்பியா? நான் போன்ல பேசிட்டேன் அவங்க நாளை வந்திடுவாங்க, அதுவரைக்கும் நம்ம வீட்ல இரு!….” என்றார் கண்டிப்போடு.
உதயாவை காண அவனோ இதுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல கெளரியுடன் உரையாடிகொண்டிருந்தான்.
குடும்பம் மொத்தமும் சேரந்து ப்ளான் பண்ணிட்டு ஆடர் போடறாங்க.
விஷ்ணுவை பார்த்து கெளரியும் உதயாவும் தங்களுக்குள் ஏதோ சொல்லி சிரித்தபடி அவனை காணவும்,
“சரியான வில்லன்டா நீ!…” என பார்வையாலேயே பஸ்பமாக்க பார்த்தான்.
அனைவரும் மண்டபத்தை ஒழுங்கு செய்துவிட்டு புறப்பட்டு வீட்டிற்கு வந்தனர்.
மறுநாள் விருந்து என்பதால் வெளியூர் சொந்தங்கள் அனைவரும் மண்டபத்தின் அறைகளிலேயே தங்கிகொண்டனர்.
புதுமண தம்பதிக்கு திருஷ்டி கழித்துவிட்டு வந்து ஆசுவாசமாக அலுப்போடு அமர்ந்தனர்.
நந்தினி கௌரியோடு அவளறைக்குள் சென்று மறைந்தாள்.
“இந்த விசேஷம் நல்லவிதமா திருப்தியா முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்குமா எனக்கு!…” –கிருஷ்ணமூர்த்தி.
“பின்ன இல்லையா கண்ணு, நம்ம வீட்டு விசேஷம்னா சும்மாவா?…” என பெருமையாக பேசிகொண்டிருந்தவரிடம்,
“பாட்டி நான் போய் தூங்கறேன். கொஞ்சம் அலுப்பா இருக்கு ஊர்ல இருந்து நேர வந்துட்டதால!…” என்று சொல்லவும்,
“சரிய்யா நீ போ போய் ஓய்வெடு!…” என அனுப்பிவைத்தவர் சிறிது நேரத்தில் அவனது அறைக்கு சென்றார்.
அந்த வீட்டில் விஷ்ணு தங்குவதற்காக அவனுக்கென ஒரு அறை தனியாக உண்டு அந்த வீட்டில்.
முகம் கழுவி விட்டு படுக்க நினைத்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசையில் வெளியே வந்தான் விஷ்ணு.
நாச்சி கையில் பெரிய தட்டை வாழையிலை வைத்து மூடி அவனது கையில் திணித்தார்.
“இந்தா அங்க உன்னை இந்த படுவா சாப்பிட விடாம ரொம்பவே கலாட்டா பண்ணிட்டான்ல அவனை அப்புறமா கவனிச்சுக்கலாம். இப்போ நீ சாப்பிடு!..” எனவும்,
தட்டை வாங்கி உள்ளே வைத்துவிட்டு, “என் செல்ல டார்லிங், எங்க இன்னும் கோவமா இருக்கியோன்னு நினச்சேன்!…” என்று நாச்சியை தூக்கி ஒரு சுற்று சுற்றி இறக்கினான். அதை பார்த்துக்கொண்டே வந்த உதயா,
“போதும்டா தாங்களை உங்க அலப்பரை. போ போய் சாப்ட்டு தூங்கு!…” என சிரித்தபடி உரைத்துவிட்டு மாடிபடிகளில் ஏறினான் தனது அறை நோக்கி செல்ல.
அவன் செல்வதையே பார்த்துகொண்டிருந்த நாச்சி, “ஐயோ இப்போ ஒருத்தன் மலையேற போறானே?…” என பம்மியபடியே உதயாவின் காட்டுகத்தலுக்காக மாடியையே பார்த்தபடி காத்திருந்தார்.
“என்னாச்சு டார்லிங்?… ஏன் இந்த நெவர்ஸ்?…” என்றான் விஷ்ணு.
நாச்சி “ஒரு நர்ஸும் இல்லை, இப்போ பாரு உன் ப்ரெண்ட் என்ன ஆட்டம் ஆடுறான்னு!…” என்று சொல்லி முடிக்கவில்லை………..
“நாச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????????????….”