ராஜாத்தி
பொண்ணுக்காக மின்னொளிக்காக கல்யாணம் செய்யறேன்னு சொல்லிட்டு கடைசியில கட்டிட்டு வந்து அவளை தனியா நிக்கவச்சதில பெரும்பங்கு இந்தம்மாவுக்கு தான்.
அவளுக்காக கல்யாணம்னா மின்னொளி விலகி போனா கூட பிடிச்சு வைக்க பாக்கறத விட்டுட்டு போனா போறான்ற மாதிரி இருந்துருச்சு. அவ விலகி போனா கூட இறுக்கி பிடிக்காம, முருகய்யன சுத்திட்டு,,இதுக்கு வேற யாரும் வந்துட்டா மின்னொளியை சரியா பார்த்துக்கமாட்டாங்கன்னு வியாக்கியானம் வேற
அருள்ஜோதி
அக்கான்னு வரப்போ கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம மின்னொளி மேல கோபத்தை காமிக்கிற மண்டைல மசாலா இல்லாத முட்டாப்பய. ஒத்தக்காலுல நின்னு கட்டினா இவரத்தான் கட்டுவேன்னு சொன்ன அக்காவ அடக்க துப்பில்ல இவனுக்கு. கோபம் மட்டும் வந்துரும் மின்னொளிய பாத்தா. தப்பு எல்லாம் இவங்க மேல வச்சு கிட்டு பார்க்கும் போதெல்லாம் அவளை குதறிகிட்டு.
ஒளி உனக்கு இப்ப லைசென்ஸ் கிடைச்சுடுச்சு, நங்கு நங்குன்னு குட்டி வச்சு செய்மா இவனை. முட்டாபய!!
முருகய்யன்
இந்தய்யா பொண்ணு பேசலைன்னு வருத்தமாவே இருப்பாராம். ஆனா
பொண்ணு விலகி போனா, பேசி பேசி அவளை சரி செய்யாம, யாருக்கு வந்த விருந்தோ இருந்துட்டு அவ பேசலன்னு குறை வேறு!!
பையன் பிறக்கும் போது, சரி ஒரு வித டென்சனில் ஊர் பேச்சை ஓளி கேட்க வேண்டாம்னு அவளை ஒதுங்க சொல்லும் அழகு பாட்டி, முருகய்யன் எல்லோரும் ஊருக்கே கடா வெட்டி விருந்து போடுவாங்களாம், ஆனா வீட்டு பொண்ணு சாப்பிட்டாளான்னு பார்க்க மாட்டாங்களாம்.
குணசாலி
குணங்கெட்டவளுக்கு பேரை பாரு குண்சாலின்னு. துடப்பகட்டைக்கு பட்டு குஞ்சலம் வச்சா மாதிரி.
வீட்டு விருந்துலையும் சரி , இவ வீட்டிலும் பொண்டாட்டி புள்ளையோட பந்திக்கு போய்ட்டாரு. பாசமாம்(யார் மேலன்னு தான் தெரியல) .
தன் மகன் பிறந்தப்போ தன் வீட்ல நடந்த விருந்துலையும் சரி மகள் சாப்பிட்டாளா இல்லையான்னு கூட பாக்காம ஊரோட கொண்டாடிட்டு அந்த பொண்ண பசியோட விட்டது தான் கொடுமை
இப்படி ஆளாளுக்கு அவ ஒதுங்கறான்னு சொல்லி சொல்லியே ஒதுக்கிவச்சு அனாதரவா நிறுத்திட்டானுங்க.
வயதுக்கு மேலான பக்குவப்பட்ட பொண்ணு அதனால தாண்டி வந்துட்டா. இல்லைனா, அவ கோட்டிதனமா ஏதாவது செய்து இருந்தா!!??
இங்கே பெரியவங்களுக்கு தான் பக்குவம் இல்லை. நீ வாமா மின்னல் இனி இவங்களை ஒவ்வொருவரா வச்சு செய்யலாம். எவனாது வாய சோத்துக்கு தவிர வேறு எதுக்கும் தொரக்க கூடாது!!..
Saranya Hema இங்கே வா, இதுக்கெல்லாம் பதில் சொல்லு, கிராமம் அப்படிதான் இருக்கும்னு ஜால்சாப்பு சொல்லாம, பதில் சொல்லு.
உணர்வுகளுக்கு கிராமம், நகரம்னு பேதம் கிடையாது. எல்லோருக்கும் ஒன்னு தான். வீர்யம் தான் வேறுபடும்