My reviews- tit bits

amirthababu

Moderator
Staff member
ஒரு மாஜி அமைச்சர், கட்சி தலைவரின் பையன் இப்படியா மக்கு மன்னாந்தையா இருப்பான்??

குதிரைக்கு கடிவாளம் போட்டா மாதிரி ஒரே பார்வை, சுத்தி என்ன நடக்குதுன்னு புரியாத டர்டி ஃபெல்லோ

என்ன கதைன்னு சொல்லுங்கள்
 
ஒரு மாஜி அமைச்சர், கட்சி தலைவரின் பையன் இப்படியா மக்கு மன்னாந்தையா இருப்பான்??

குதிரைக்கு கடிவாளம் போட்டா மாதிரி ஒரே பார்வை, சுத்தி என்ன நடக்குதுன்னு புரியாத டர்டி ஃபெல்லோ

என்ன கதைன்னு சொல்லுங்கள்

எனக்கு தெரியுமே 💃💃💃💃
 
நீ எங்கே...
என் நினைவுகள்
அங்கே...

நீ ஒரு நாள்
வரும் வரையில்
நான் இருப்பேன்
நதிக்கரையில்

இது வசீ நிதிக்கு சொன்ன நினைப்பது.
🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼

நீ எங்கே..
என் நினைவுகள்
அங்கே... 😈😈😈😈😈😈

இது முனியில் நினைவில் வசி
🌵🌵🌵🌵🌵🌵🌵
 
இன்று ரோஜாவின் கடைசி பதிவு. ஒரு சின்ன பின்னோட்டம்.

தன்னைத்தானே செதுக்கும் ஒரு பெண் சிற்பி போல் இருந்தது அந்த சிலை. அந்த சிலையில் இருந்த பெண் தன்னைத்தானே செதுக்கினாள். அவள் கண்களில் கர்வம் இருந்தது. அந்தச் சிலையில், உளியைத் தாங்கிய அழுத்தமான கைகளில் நரம்புகள்கூடத் தெரிந்தது.
நன்றி- Bala Sundar

அடிமட்டத்தில் இருந்து தன்னை தானே செதுக்கிக் கொண்ட சிற்பிகள் ஓளியும், ரோஜாவும். ஆதரவாக எந்த சொந்தமும் இல்லாத போதும் தாங்களே தங்களை மெருகேற்றி கொண்டவர்கள்.

ஓளிக்கு தாய் மட்டுமே பற்றுகோல். தாய்க்குப் பின் தன் கையே தனக்கு உதவி. ஆனால் இவள் வாழ்க்கையில் வில்லிகள் இல்லை. கிராமத்திற்கே உண்டான புரணி பேசும் கூட்டம். அதனை தன் சிடுசிடு பேச்சினால் அலட்சியமாக கடக்கும் பாங்கு.

ரோஜாவிற்கும் அறியாத வயதில் பாட்டியின் ஆதரவு, பாட்டியின் மறைவிற்கு பின்??. இன்னொரு தாயாக இருந்து வழிகாட்ட வேண்டிய சகோதரியே வில்லியான கொடுரம்.அவளின் பேச்சை கேட்டு ஆடும் பெற்றோர்கள். இவர்களை சமாளிக்கும் ரோஜா. வேறு ஒரு தளத்தின் கதையில் வரும் வரிகள் ரோஜாவிற்கும் பொருந்தும்.

" அவள் செய்த பாவம் இந்த பெற்றோருக்கு பெண்ணாக பிறந்தது. செய்த புண்ணியமோ மலையளவு, அதனால் விதுரன் அங்கிள் அவளுக்கு கிடைத்தது "

வழிகாட்டுதல் வேண்டிய வயதில் அது கிடைக்கவில்லை இருவருக்கும். தங்களை தாங்களே பட்டை தீட்டி கொண்டனர்.

தனிமரம் தோப்பாகாது. குடும்பம் எனும்தோப்பில் தனிமரமாக நின்றவர்கள் இருவரும்.

ஆனால் அந்த தனிமரத்துக்குள் தோப்பளவு எண்ணங்கள். இலைகள் உதிர்ந்த நிலையில், காய்ந்த கிளைகளுடன் துணிவோடு நின்றன அந்த தனிமரங்கள். அந்த நிலையிலும் மனம் எனும் மரம் மட்டும் உயிர் கொண்டு நின்றது அதன் வசந்த காலத்தை தேடி.

அந்த வசந்தங்களும் வந்தது அருள், விதுரன் என்ற வடிவில் ஒளிக்கும், ரோஜாவிற்க்கும்.

அவர்களும் அந்த தனிமரத்தை சுற்றி குடும்பம் எனும் தோப்பை அமைத்து கொண்டார்கள்.

இருவரும் மறக்க முடியாதவர்கள். ஒளியின் சொலவடையும், ரோஜாவின் அங்கிள் என்ற விளிப்பும்.
வாழ்க வளமுடன் சரண்யா.

Saranya Hema
 
வாசு ஹனிமூன் கேன்சல், பவினால வாசுவ தீய்க்க போரா பூர்வா!!😕😡😡😡.

வாசுக்கு வேலை, வீடு இருக்கு, அப்பா பேசியவுடன் போயிட்டான்., பாவம் மருதுவ பேசினா அவன் எங்கே போவான்!?!?

டேய் வாசு.

நீ உன் மாமியார்க்கு இப்படி தான் விருந்து போடனும். அந்த தீஞ்சு போன ஆபோஜின் இல்லை
 
“சமுத்திரம் மாரிடி நீயி. ஒன்னிய புரிஞ்சுக்க இன்னொரு சென்மத்த எடுத்துதேன் வரனுடி....”

மின்னொளி என்பவளின் ஆழ்கடலை போன்ற மௌனத்தை தனக்குள் உள்வாங்கிய அருள்ஜோதி என்னும் சூரியனவன் அவளுடன் கை கோர்த்து வாழ்க்கை பயணத்தில் நித்தம் முத்தெடுக்கிறான்.

முடிந்த கதைக்கும் அடுத்த கதைக்கும் வாழ்த்துக்கள்
 
மருதுன்னு பேர் வச்சதுக்கு பதிலா பலராமன் வச்சு இருக்கலாம். பொருத்தமா இருந்து இருக்கும்.

அந்த பலராமும் பேர் தான் அண்ணா, ஆனா தம்பி சொல்படி தான் எல்லாம்.

இங்கேயும் வாசு தான் அவனுக்கு எல்லாமும்.

தம்பி கிருஷ்ணன் கிழிச்ச கோட்டை தாண்டாதவங்க ரெண்டு பேரும்.

கடைசியா மனம் கௌரவர்கள் பக்கம் கிருஷ்ணனோ பாண்டவர் பக்கம். தம்பிய மீற விரும்பாம யுத்த்தில் பங்கு பெறாமல் தேசாந்திரம் போய் விட்டார்.

மருதுக்கும் அந்த நிலை வருமோ??

அப்பாவா?? தம்பியா??

வழிமேல் விழி வைத்து அம்பு விட காத்திருக்கிறார் முத்து.

அந்த அம்போ டாட்டா காட்டி வரட்டுமான்னு கேட்டே மனுஷனை அல்லாட வைக்குது.

முத்து வாசு குடுத்த பாஸ்புக்கையும் ஆட்டய போட்டாச்சு. இன்னொரு சண்டை இருக்கு வாசு கூட.

குடுத்த காசை நினைச்சா மனுஷனுக்கு பத்து நாள் தூக்கம் போச்சு.
 
Back
Top