நவராத்திரி

amirthababu

Moderator
Staff member
நவராத்திரி-1 ம் நாள்

சைலபுத்ரி


இந்துமத தத்துவமெல்லாம் அதன் ஞான தாத்பரியமெல்லாம் ஒருமுகம் கொண்டதல்ல, அது வைரத்தை போல பலமுகம் கொண்டது

லவுகீகம், ஆன்மீகம், பிரபஞ்சவியல், மன நலம், உடல் நலம், யோக தத்துவம் என எல்லாமும் கொண்ட ஞானவைரம் அது

அந்த பன்முக தத்துவங்களில் ஒன்றுதான் நவராத்திரி காலங்கள்

இந்துமதம் நவம் என்பதை பல இடங்களில் பல வடிவங்களில் சொல்லும், நவசக்தி, நவமணி, நவ சித்தர்கள், நவ யாககுண்டம், நவ பாஷாணம், நவநிதி, நவ கிர்கங்கள் என அது சக்தி வடிவங்களை இயக்க தத்துவத்தை ஒன்பது வடிவாக பிரித்து சொன்னது

தனித்து இயங்கும் சக்திகளை ஒன்பதாக பிரித்த மதம் இந்துமதம், அப்படி அது துர்கா எனும் மகா சக்தியினையும் நவதுர்கா என ஒன்பது வடிவமாக சொன்னது

சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என நவதுர்காவினை அது பிரித்து சொன்னது

நவராத்திரியின் ஒன்பதுநாட்களும் இந்த ஒன்பது தேவியருக்கு என அது நாள் கொடுத்து தியானிக்க சொன்னது

அவ்வகையில் முதல்நாள் அன்னை சைலபுத்ரி எனும் தேவிக்கானது1000019025.webp
 
Last edited:
இந்த வரலாறு கந்தபுராணத்தில் இருந்துதான் தொடங்குகின்றது, கந்தபுராணம் என்பது வெறுமனே முருகபெருமான் அவதரித்து சூரனை வென்றார் என்பது மட்டுமல்ல, அது எல்லா ஆணவ அகங்காரம் கொண்ட அசுரர்களும் அழிந்த வரலாற்றை சொல்வது

அவ்வகையில் சைல புத்ரி கதையும் அதுவே சொல்கின்றது

சைலம் என்றால் மலை, புத்ரி என்றால் மகள் , மலைமகளான பார்வதியினை சொல்லும் வடிவம் இது

தாட்சாயினி கதை எல்லாரும் அறிந்தது, அந்த தட்சனின் மகளாக அவதரித்து தட்சனின் அகங்காரத்தால் நெருப்பில் வீழ்ந்து சதி தேவி என்றானவள் இவளே

அடுத்த பிறப்பில் இமயன் மகளாக , அந்த பர்வத்ராஜன் மகளாக பிறந்தவளும் அவளே

இங்கு கவனிக்கவேண்டிய விஷயம் முதலில் அவள் தட்சன் எனும் அகங்காரிக்கு மகளாக பிறந்து சிதையில் வீழ்ந்தது, அகங்காரம் இருக்குமிடம் அதுவும் சிவன் உத்தரவை மீறி சென்றால் என்னாகும் என்பதை காட்டிய காட்சி அது

என்னதான் சக்தி என்றாலும் சிவனை மீறி சென்றால் என்னாகும் என்பதை சொன்ன தத்துவம் அது, பரம்பொருள் எனும் பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா அகங்காரமாக பிரிந்தால் மாயையில் விழும் என்பதை சொன்ன புரானம் அது

இதனை சொல்லி குடும்ப பெண்களுக்கு கணவனின் முக்கியத்துவத்தை அந்த ஞானமதம் போதித்தது

அப்படியே இமயன் மகளாக பார்வதி அவதரித்தாள் என்பதும் சிவனை அடைந்தாள் என்பதும், நல்ல கணவனை அடைவதும் அவனோடு வாழ்வதும் வரம், இளமையிலே பெண்கள் இறைவனை நினைந்து நல்வாழ்க்கைக்கு நல்ல துணைக்கு பிரார்த்திக்க வேண்டும் என்பது

இந்த வடிவமேதான் அன்னை மீனாட்சி மதுரையில் அவதரித்த காட்சியிலும் வரும், அது இந்த இரண்டின் தொடர்ச்சியே, வாலை பருவத்திலே நலல்வாழ்வுக்காய் இறைவனிட்ம வேண்டி தியானிக்க வேண்டும் என்பது

நவராத்திரியில் குலபெண்கள் தாங்கள் பின்பற்ற வேண்டியதும், தங்கள் பிளளைகளுக்கு நவராத்திரியில் கற்றுகொடுக்க வேண்டியது இதுதான்
 
சைலபுத்ரி எனும் மலைமகளை முதல் நாள் தியானிக்கும் போது கணவனை மீறிய தாட்சாயினி, தியானத்தில் பூஜையில் தன் துணையினை கண்டடைந்த பார்வதி, ராணியாக ஆண்டாலும் உரியவனை கண்டதும் இறைவிருப்பபட வாழ்வினை தொடங்குதல் வேண்டும் என்பதை சொல்வது

ஆம், மலைபோல் நின்று நம்பியவரை காப்பவள் சைலபுத்ரி, அவள் எல்லோர் வாழ்வையும் தாங்கி காப்பாள், அதனாலே அவள் மலைமகள் என்றானாள்

மலைதான் இந்த உலகின் அமைப்பில் முக்கியமானது, மலைதான் ஆறுகளை தரும், ஆறுகள்தான் உலகை வாழவைக்கும்

மலைதான் தன்னில் பொழியும் மலையினை ஒரு சொட்டு தனக்காக வைக்காமல் நிலத்துக்கு அனுப்பும், மழையில்லா காலங்களில் பனியினை உருக்கி உயிர்வாழ அனுப்பும்

மலைதான் காட்டுவளம், உயிர்வளம் என எல்லாமும் தரும், தேவதைகள் அங்கிருந்துதான் அருள்பாலிக்கும், நல்ல காற்றும் நல்ல நீரும் அங்கிருந்துதான் வரும்

மலைதான் ஒரு நாட்டுக்கு முதல் வளம், மலை இருந்தால் எல்லாமும் எல்லா செல்வமும் வரும், மலைதான் பெரிய காவல்

அப்படி ஹிமாலயம் எனும் மலை அமையபெற்றதாலே பாரதம் வற்றா நதிகளை பெற்று, பெரும் அரணையும் வடக்கே பெற்றது

அன்னை மலைமகள் என்பது மலைபோல் நம்மை வாழவைப்பவள், எல்லா ஆபத்தையும் தடுத்து காத்து எல்லா வளமும் தந்து வாழவைப்பவள் என பொருளாகின்றது

மலை நிலத்துக்கு மேல் மட்டும் இருப்பதல்ல மணலுக்கு அடியில் இருப்பதும் பாறை எனும் மலையே அதுதான் இந்த உலகை இந்த நிலத்தை தாங்குகின்றது

அந்த உறுதியான படிமானத்தில்தான் உயிர்கள் வாழ்கின்றன மானுடனும் வாழ்கின்றான், மலைதான் உயிர்களை ஆதாரமாக பாறை என தாங்குகின்றது, மலைதான் பூமிக்கு மேல் மனிதனை வாழவும் வைக்கின்றது

இப்படி அன்னை மலைபோல் நின்று தாயாக வாழவைக்கின்றாள், அவளை இந்நாளில் தொழவேண்டும் என இந்நாளை சொன்னார்கள்

இந்த தத்துவம் இன்னும் வரும்

உடலை ஒன்பதாக பிரித்தால் அங்கே எலும்பு என்பது முக்கியமானது, மற்றவை தோல், மாமிசம், மஞ்ஞை, சுக்கிலம், ரோமம், கொழுப்பு, ரத்தம், நிணநீர் என வரும்

இந்த ஒன்பது பொருளும் சேர்ந்ததுதான் உடல்

அன்னை மலைமகள் என்பது நிலத்துக்கு மலை எனும் பாறை எப்படியோ அப்படி உடலுக்கு எலும்பு நின்று உருதருகின்றாள், வாழ்வின் ஆதாரமாக நிற்கின்றாள்

அவள் எப்படியான பலத்தை தருவாள் என்பதுதான் இங்கே காணவேண்டியது, அவளின் தாத்பரியமே அதில்தான் அடங்கியுள்ளது

அன்னை சிவனின் தோளில் இருந்து வந்தவள் என்பது அவள் எலும்பின் அதிபதி எலும்பு தத்துவத்தை கொண்டவள் என்பதை சொல்கின்றது

உடல்பாகத்தில் தோள் எலும்புதான் வலுவானது, சுமைகளை தாங்க கூடியது இன்னும் பலமும் வலிமையும் அதிகம் கொன்டது

அதனாலே அவள் தோளில் இருந்து வந்தாள் என்பது அவள் வலிமையானவள் சக்தி கொண்டவள் எதையும் தாங்கும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையினை தருவாள் என்கின்றது

ஆம், அவள் எலும்பின் அதிபதி

இந்த உலகில் எலலமே ஒவ்வொரு வடிவத்தை கொண்டிருக்கின்றன, வடிவம் இல்லாமல் படைப்பு இல்லை. பிரபஞ்ச கோள்கள் முதல் பூலோக மண்புழு வரை எல்லாமே ஒரு வடிவம் கொண்டவை

மானிட உடலுக்கும் வடிவம் உண்டு அந்த வடிவினை கொடுப்பது எலும்பு, எலும்பு இன்றி உடல் வடிவமில்லை இயங்க வழியில்லை

ஆம், இந்த வடிவத்தின் ஆதாரமாய் நிற்பவள்தான் இந்த அன்னை. ஒவ்வொரு படைப்புக்கும் மிக சரியான வடிவத்தை அவள் வழங்குகி இயக்கம் சரிவர நடக்க அவள் அடிநாதமாய் இருக்கின்றாள்

வானில் சுழலும் கோள்களுக்கு உருண்டை வடிவம், மலைகக்கு கூம்பு வடிவம் நதிக்கு திரவ வடிவம் மேகத்துக்க்கு புகைவடிவம், கடலுக்கு அலை வடிவம் என கொடுத்த அவள் ஒவ்வொரு உயிருக்கும் எது அதன் இயக்க வடிவமோ அதை கொடுக்கின்றாள்

மரத்துக்கு, செடிக்கு, மலருக்கு, ஊர்வன, பறப்பன, நடப்பன நீந்துவன என எல்லாவற்றுக்கும் எது ஏற்ற வடிவமோ அதை அருள்கின்றாள்

ஒவ்வொரு படைப்பும் எப்படி இயங்க வேண்டுமோ அந்த ஞானம் அவளாலே வடிவமைக்கபடுகின்றது
சரிவுகளை கொண்ட மலை, பள்ளத்தில் ஓடும் நதி, கூர்மூக்கும் இறகும் வாலும் கொண்ட பறவைகள், தங்கள் கடமையினை க்ர்மாவினை செய்யும்படி உடல் கொண்ட விலங்குகள் என எல்லாமும் பார்த்து பார்த்து வடிவமைக்கின்றாள்

விதைகள் அதன் வடிவம் முதல் அதன் எல்லா நுட்பமும் அவளாலே வடிவமைக்கபடுகின்றன, எல்லா படைப்பின் மூல வடிவமும அவளாலே உருவாகின்றன‌

அப்படிபட்டவளே மானுடருக்கும் எலும்பாய் வடிவங்களை கொடுக்கின்றாள், எலும்புதான் மானுடனுக்கு வடிவம் கொடுக்கின்றது அதனால்தான் மானுட உடல் இயங்குகின்றது

எலும்பும் வடிவமும் வெறும் இயக்கம் மட்டுமல்ல, அதுதான் பலம் அதுதான் தாங்கும் சக்தி அதுதான் பலமாக உழைக்க வைக்கும் சக்தி

எதையும் தாங்குவதும் உழைக்க வைப்பதுமான சக்தியினை எலும்புதான் கொடுக்கும் எலும்பு இன்றி மானிடர் இல்லை

முதுகெலும்பாக நிற்போம், தோள் கொடுப்போம், உறுதியாக நிற்போம் எனப்தெலலம் எலும்பின்றி எந்த் இயக்கமும் இல்லை தாக்கமும் இல்லை என்பதை சொல்வது

அன்னை அப்படி எலும்புபோல் மானுடருக்கு பலம் தருவாள், வடிவம் தருவாள், உழைக்கும் பலத்தை எதையும் தாங்கும் சக்தியினை தருவாள் என்பது அவள் வழிபாட்டின் தாத்பரியம்

சிவனுக்கு "கங்காள மூர்த்தி" என ஒரு பெயர் உண்டு, அதாவது ஒரு முதுகெலும்பினை கையில் வைத்திருப்பவர் என் பொருள்

அந்த சிவனின் சக்திமிக்க எலும்பாக இருப்பவள் அன்னை என்பதே அதன் தத்துவம், சிவனின் ஆதாரம் அவள்தான் என்பதே அந்த கங்காள முர்த்தி கோலத்தின் தாத்பரியம்

எலும்புதான் மிக முக்கிய விஷயங்களை காப்பதும் இயக்குவதுமானது, உடலில் இதயம் மூளை என முக்கிய பாகங்கள் எலும்புக்கு உள்ளேதான் உன்டு

மானுட உடலில் 206 எலும்புகள் இப்படி பலவகை பணிகளை செய்கின்றன, அவைதான் இரத்தம் உருவாக காரணமான மஞ்சையினை உருவாக்கி காக்கின்றன‌

ததிசி முனிவர் முதுலெலும்பை ஆயுதமாக விட்டு சென்றார் என்பதும் ,சகுனி தன் முன்னோர்களின் எலும்பை ஆயுதமாக கொண்டிருந்தான் என்பதும் சக்தியினை வழி வழி வந்த பலத்தினை சொல்வது

எலும்பின் இன்னொரு வடிவம்தான் சங்கு, இதனாலேதான் சிவன் கங்காளமுர்த்தி என எலும்போடு இருப்பது போல் விஷ்னு பகவான் சங்கோடு இருக்கின்றார்

எப்படி மானுடன் பிறக்கும் போது எலும்பும் உருவாகி அவன் இறந்தபின்பு அது எஞ்சுகின்றதோ, அப்படி சங்கு பூச்சு உருவாகி அது வளர்ந்து அழிந்தபின்னும் சங்கு அழிவதில்லை

சங்குதான் அந்த உயிருக்கு வடிவம், அந்த உயிருக்கு காவல், அதன் ஆதாரம் எல்லாம். அப்படி மானிட உயிர்க்கு பெருமாளே காவல் அவரே ஆதாரம் என சொல்லத்தான் சங்கை அவர் கையில் கொடுத்தார்கள்
கடலில் சங்கு கடைசியில் எஞ்சுவது போல் சம்சார சாகரத்தில் எலும்பு மிஞ்சும் என்பதை காட்டவே சங்கு இங்கு பகவான் கையின் அடையாளமாயிற்று

அப்படியா மகா சிறப்பானது எலும்பு, அதன் அதிபதி தேவி மகேஸ்வரி, அதனாலே வெண்மை நிறமான எலும்பினை அவளுக்கு கொடுத்தார்கள்

எலும்பு என்றால் உறுதி, பலம். அன்னை எலல உறுதியும் பலமும் தருவாள் எதையும் தாங்கும் சக்தி தருவாள் என்பதற்காக அவளுக்கு வாகனமாக நந்தியினை வைத்தார்கள்

நந்தி பலமானது, கடுமையாக உழைக்க கூடியது. அன்னையினை வழிபட்டால் உழைக்கும் சக்தி எந்த பெரும் சுமையினையும் தாங்கி செல்லும் சக்தி கிடைக்கும் என்பதை சொன்னார்கள்

ஆம் , அன்னை பார்வதியின் வழிபாட்டில் ஆயிரம் தத்துவங்கள் உண்டு, லவுகீகமாகவும் சூட்சுமமாகவும் நிறைய உண்டு

லவுகீகமாக அன்னையினை வழிபட வழிபட எலும்பு சம்பந்தமான சிக்கல்கள் நோய்கள் லவுகீக வாழ்வில் தீரும், அவளுக்கான வழிபாட்டை சரியாக செய்தால் எலும்பு நோய்கள் தீரும்

எலும்பு சம்பந்தமான நோய்களே தலைமுதல் கால்விரல் வரை ஏதோ ஒரு உருவில் வந்து மானிடரை முடக்கும், அவளை வேண்ட வேண்ட அவள் எலும்பு நோய்களை தீர்த்து முழு சக்தி தருவாள்

எந்த பணி, எந்த தொழில் ,எந்த கலையாக இருந்தாலும் அதன் அடிப்படை வடிவம் சரியாக வர அவள் முழு அருள் செய்வாள், அதனால் தொட்டது எல்லாம் அவள் அருளால் வாய்க்கும்

உழைக்கும் முழு பலத்தை எருதுபோல் உழைக்கும் பெரும் பலத்தை, களைப்பில்லாமல் சளைப்பில்லாமல் உழைக்கும் பெரும் பலத்தை அவள் கொடுப்பாள்

பெண்கள் அவளை வழிபட சொல்ல காரணம் நிறைய உண்டு, இந்துமதம் அதை சரியாக செய்தது
பெண்கள்தான் ஒரு குடும்பத்தின் வடிவம், அவர்களை கொண்டே ஒரு குடும்பம் வடிவம் பெறும், பெண்கள் சரியில்லா குடும்பம் நல்ல வடிவம் நல்ல கோலம் பெறா, அது அவமான கோலமாகிவிடும்

குடும்பம் சரியாக அமைய, நல்ல வடிவில் அமைய பெண்கள் அவளை வழிபடுதல் அவசியம்
குடும்ப சுமையினை தாங்கி, குடும்பத்தின் முக்கிய ஆதாரங்களை காத்து எலும்பு செய்யும் அனைத்து காரியங்களையும் குடும்பத்துக்கு செய்பவர்கள் பெண்கள், அதனால் அந்த அன்னையின் அருளில் எலலா பலமும் அவர்கள் பெறுவது அவசியம்

அன்னையினை வழிபட்டால் பெண்களுக்கு பொறுப்பும், சுமைதாங்கும் சக்தியும், குலம் தளைக்க உழைக்கும் சக்தியும் அதிகரிக்கும், அவள் அருளால் அவளை வணங்கும் குலம் வலிமைபெறும்

இதை பெற்றுகொள்ளத்தான் சைலபுத்ரி எனும் மலைமகளை வணங்க சொன்னார்கள்

இப்படி லவுகீக வாழ்வின் தாத்பரியத்தை சொன்ன மதம் யந்திர வழிபாட்டில் சக்கர தத்துவமாக அவளை சொல்லிற்று

யந்திரங்களில் மிகவும் உயர்ந்ததும், சாமான்யங்களினால் எளிதில் வணங்கப்படக் கூடிய யந்திரம் ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு ஆகும். ஸ்ரீ வித்யா பூஜை என்பது இதுதான்

ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும உருவம். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் அவள் சூட்சுமமாக அம்ர்ந்திருப்பாள், அவளை மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது பரமேஸ்வரனும், பார்வதி தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.

ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது, இந்த ஒன்பது கோட்டைகள் எனும் நிலைகள் ஒன்பது தேவியரை குறிப்பது

அதில் முதல் தேவி இந்த சைலபுத்ரி எனும் மலைமகள்,

இந்த முதல் சக்கரம் வட்டவடிவிலானது அதற்கு ‘த்ரைலோக்ய மோகன சக்கரம்’ என பெயர் த்ரைலோக்ய மோகனம் என்றால் மூவுலகங்களையும் மயக்குவது என்று பொருள். இது திரிபுரா சக்ரேஸ்வரி என சொல்லபடும்

இதுதான் திரிபுர சுந்தரி என்றாயிற்று

ஆக சக்கரவழிபாட்டில் முதலில் வரும் இந்த தத்துவம் இந்த சக்திதான் இன்றை நாளுக்கானது

சக்கரவழிபாடு செய்பவர்கள் இந்த நாளில் அவளுக்கான பூஜையினை சரியாக செய்தால் சக்கரத்தின் முதல் தளம் முதல் நிலை துலங்கும்

இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதார சக்தியாக ஜொலிக்கின்றாள் , மூலாதார சக்தி அவள்தான்,

நவதுர்கா என்பது யோகத்துடன் எப்படி பொருந்திவரும் என்பதை திருமூலர் பாடல் கொண்டு தொடங்கலாம், இந்த நவ துர்கை தத்துவத்தைதான் பத்தாம் திருமுறையில் பாடிவைத்தார் திருமூலர்

"நவாக்கரி சக்கர நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி யக்கிலீ சௌமுத லீறே"

என்பது முதல் பாடல்

அதாவது நவம் என்றால் ஒன்பது, அக்கிரி என்றால் அட்சரம் பொருள்

ஆக பாடலின் பொருள் என்னவென்றால் ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட ஒன்பது சக்கரத்தைப் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்றது

இங்கே ஒன்பது அட்சரம் என்பது "ஓம் ஐம் கிலீம் சௌவ்" எனும் ஒன்பது எழுத்து மந்திரமாகும்

இத "ஐம் கிலீம் சௌவ்" என்பதை மாற்றி இட்டு எழுதினால் 81 வார்த்தைகள் மாறி மாறிவரும், இந்த மந்திரங்களை முழுக்க சொன்னால் அன்னையின் அருளை அடைந்து முழு சித்தி ஆகலாம்

அந்த சூட்சுமத்தை , இந்த ஒன்பது அட்சரத்தை சொல்ல சொல்ல மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி துரியத்தை தொடும் அப்போது ஞானம் விளையும் என்கின்றார்

ஆம், இங்கே நவதுர்கா வடிவத்தை நவ யோக நிலைகளாக போதிக்கும் திருமூலர், அதற்கான மந்திரமும் தருகின்றார்

""ஓம் ஐம் கிலீம் சௌவ்" என்பது அதுதான், இதுதான் வாலை குமரி எனும் திரிபுர சுந்திரிக்கான பீஜ மந்திரம்
இதனை சொல்ல சொல்ல குண்டலினி அன்னையின் அருளில் துலங்கும் என்பது யோகியர் சொன்னது

இது இன்னும் ஆழமாக செல்லும்

"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு“

என்பது கருவூரார் பாடல்
 
ஆதியும் அந்தமும் வாலை இருப்பிடமே என்றால் அது நம் சிரசில் உள்ளே மத்தியிலே , நம் இரு கண்ணும் உள் சேரும் இடத்திலே , நம் உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே உள்ள அந்த இடமே வாலை இடமாம்.

இதையை வாலை குமரி என்று சித்தர்கள் பாடுகிறார்கள் , பாலதிரிபுர சுந்தரி அவளேதான்

திருமுலரின் இந்த தத்துவமும் அவர் பாடலும் ஆலயம் அமைந்த வகையில் காட்சியாக விளக்கபட்டுள்ளது

"ஈறான கன்னி குமரியே காவேரி
வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள்
பேறான வேதா கமமே பிறத்தலான்
மாறாத தென்திசை வையகஞ் சுத்தமே”"

என்பது திருமந்திரம் பாடல்

அதாவது கங்கை , யமுனை, சரஸ்வதி, பிரமபுத்திரா, சிந்து, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, நர்மதை என்ற நவ நதியும் கலக்கும் ஓர்‌ இடம் போல ஒன்பது சக்கரங்கள் அல்லது யோக மையங்கள் சந்திக்கும் இடத்தில் கன்னியா குமரியாக அன்னை நிற்கின்றாள்

இந்த ஒன்பது சக்திகளும் மூன்றில் அடக்கம், அந்த மூன்றும் முக்கடலாக சங்கமிக்கும் இடத்தில் கன்னியாகுமரி என அம்மன் தவம் செய்வது அந்த தத்துவமே

ஆம், முக்கடலும் சங்கமிக்கும் அந்த இடத்தில் பிரபஞ்ச சக்தி குவிந்து கிடக்கின்றது, அதனால் அங்கு தவம் செய்தால் கைகூடும் என கன்னியாகுமரி எனும் வாலை உடலில் துலங்குவாள் என சொல்லி அடையாளமிட்டு கோவில் கட்டி தந்தார்கள் ஞானியர்

அக்கால ஆதிசங்கரர், ராமானுஜர், யோகிராம் சுரத்குமார், விவேகானந்தர், மாயம்மா என எல்லோரும் கன்னியாகுமரிக்கு ஓடிவந்து தவமிருந்த காரணம் அதுதான், அப்படி நம்பி அதன் தாத்பரியம் அறிந்து வந்தோர் பெரும் ஞானம் அடைந்து ஞானியராகவும் ஆனார்கள்

கன்னியாகுமரி என்பது வெறும் இடம் பெயர் அல்ல, அங்கே கன்னி எனும் வாலை குமரி துலங்குவாள், அங்கே தவம் செய்தால் வாலை எனும் ஞானநிலையினை அடையலாம், மூலாதாரம் முழுக்க துலங்கும் என்பதே தன் தத்துவம்

அந்த ஒன்பது சக்திகளின் வடிவமான அன்னை அங்கே வீற்றிருக்கின்றாள் என்பதே அந்த ஆலய தத்துவம்

காலம் காலமாக அது ஒளிவீசி கொண்டிருப்பது அப்படிததான் , உங்களில் மறைந்திருக்கும் அன்னையின் ச்கதியினை, அழியா சக்தியான கன்னிஎனும் வாலை சக்தியினை அந்த ஆலயம் காட்டிதரும்

ஆக சைலபுத்திர் என்பவள் இந்நாளில் வழிபடவேண்டிய மகா தெய்வம், வாலை குமரி அவளே , ஒவ்வொருவர் உடலிலும் சக்தியாய் மறைந்திருப்பவள் அவளே, பார்வதி, மலைமகள் மீனாட்சி, குமரி என கொண்டாபடுபவள் அவளே

அவளை வணங்க வணங்க ஞானம் கைகூடும்,ஆரோக்கியம் மேம்படும், யோகம் வாய்க்கும், வாழ்வு வளமாகும், இம்மை செழித்து மறுமையும் நலமே கைகூடும்

அவள் மலைபோல் தாங்குவாள் வாழவைப்பாள், அவள் எலும்பாய் நின்று உடலை தாங்குவாள், அவளே பிரபஞ்சத்தை வடிவமைத்து மறைந்திருந்து இயக்குவது போல் இந்த உடலை உருவாக்கி அதில் மறைந்திருந்து கர்மம் செய்ய வைக்கின்றாள்

அவளை வணங்க வணங்க எல்லாம் கைகூடும் , அவளுக்கான நாள் இது

இந்த நாள் அவளுக்கானது, """ஓம் ஐம் கிலீம் சௌவ்"" எனும் மந்திரத்தை 108 முறை பாடலாம்

"வ‌ந்தே வாஞ்சித் லாபாய சந்திர கிருத சேகரம்
விருஷபாருடம் சூலதாரிநீம் ஷைல புத்ரீம் யஷஷ்விநீம்"

எனும் ஸ்லோகத்தையும் முடிந்தவரை சொல்லலாம்

அதாவது விருஷபம் (நந்தியின்) மேல் ஏரி வருபவளும், சூலத்தை ஆயுதமாக கொண்டவளும், மூன்றாம் பிறையைத் தன்னுடைய கிரீடமாகக் கொண்டவளும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரும் அன்னையாம் சைலபுத்திரி தேவியை வணங்குகின்றேன் என பொருள்

இந்நாளில் மஞ்சள் மேடையிட்டு அவளை வணங்குதல் நலம், மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்தல் நலம்

கருப்பு சுண்டலும் கேசரியும் நைவேத்திய பிர்சாதமாக கொடுத்தல் நன்று. பால் சாதம் இன்னும் நன்று

தேவி துர்க்கையின் முதல் வடிவான சைலபுத்திர் தேவியினை, இந்த முதல் நாளின் இரவில் அவளை அவளுக்குரிய மந்திரங்கள் பிரசாதங்களுடன் வழிபடுவோம், அவளை முழுக்க தியானிப்போம்

அந்த மலைமகள் நமக்கும் நாட்டுக்கும் மலையாய் நின்று பெரும் காவலும் வரமும் அருளட்டும், தேசமும் இந்துமதமும் இந்து மாந்தரும் அவர்களால் உலகமும் வாழட்டும்
 
நவதுர்கா 02 : பிரம்மசாரிணி .

நவராத்திரியின் இரண்டாம் நாள் பிரம்மசாரிணி எனும் துர்க்கைக்கானது, நவதுர்கையில் இவள் இரண்டாம் வடிவம்.

இவள் வாலை எனும் பாலகியினை விடக் கொஞ்சம் முதிர்ந்த குமரி எனும் நிலைக்கு வருபவள்.

எப்படி ஒரு மனிதன் பிறந்து பாலகன், சிறுவன், வாலிபன், கிரகஸ்தன், முதியவன் எனும் நிலைக்கு கட்டம் கட்டமாக செல்வானோ, எப்படி ஒரு மரம் முளைவிட்டு கன்றாகி மரமாகி பூத்து காய்த்து கனிகொடுக்குமோ அப்படி ஒருவன் ஆன்மீகம், யோகம், லௌகீகம் என எல்லாவற்றிலும் அன்னையின் அருளை எப்படிப் படிப்படியாக பெறமுடியும், என்னென்ன படிநிலையில் என்னென்ன நிலையில் அடுத்தடுத்து அன்னை அருள்வாள் என்பதைச் சொல்லும் தத்துவம்.

அவ்வகையில் இது இரண்டாம் நிலையில் நின்று அருள் வழங்கும் வடிவம், குமரி வடிவம்.

இந்த நிலைதான் பிரம்மசாரிணி நிலை.

1000019028.webp
 
'பிரம்மம்' என்றால் உயர்ந்தது. 'சாரி' அல்லது 'ஆச்சாரி' என்றால் அந்த வழியில் செல்பவர் எனப் பொருள். மிக உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்வோர், எளிதில் எல்லோராலும் செல்லமுடியாத பெரும் இலக்கை நோக்கிக் கர்மமே கண்ணாகி அதுவே மூச்சாகி அதுவே இலக்காகி ஒருவன் கொஞ்சமும் அசையாமல் தவமிருந்து போராடும் நிலைதான் பிரம்மச்சாரி நிலை.

நோக்கம் உயர்ந்தது. இலக்கு எல்லாவற்றிலும் மேலானது எனும் நிலையில் அந்த ஒன்றைத் தவிர வேறு நோக்கமில்லாமல் அந்த ஒன்றிலே நிலைத்து அந்த வழிநடந்து, எந்நிலையிலும் கலங்காமல் இலக்கை அடைவது.

பிரம்மச்சரியம் என்றால் திருமணமாகாதவன் எனப் பின்னாளில் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. பிரம்மச்சரியம் என்றால் தன் இலக்கு தவிர தன் பெரிய நோக்கம் தவிர எதையும் தேடாதவன் என்பது பொருள்.

அந்த வரத்தை பலத்தை தருபவள் பிரம்மச்சாரிணி தேவி.

சுருக்கமாகச் சொன்னால் எது ஒருவன் கர்மமோ அந்தக் கர்மத்தில் சரியாக அவனை நிறுத்தி கர்மத்தைச் செய்யவைத்து அதிலே துணை நின்று. அந்த கர்மத்தாலே முக்தியும் ஞானமும் பிறப்பற்ற நிலையும் அடைய செய்யும் வரம் தருபவள் இவளே.

இவளை ஏன் எல்லோரும் இன்று வழிபடவேண்டும் என்றால் அவள்தான் அலையாடும் கடல்போல் ஆசைகளும் பிரச்சினைகளும் அடித்து ஆடும் வாழ்க்கை கடலில் நம்மைப் படகாகச் சுமந்து செல்வாள், இருளில் ஒளியினைக் காட்டி கரம்பிடித்து இதுதான் பாதை, இதுதான் கர்மா, இதற்காகத்தான் நீ படைக்கப்பட்டாய் எனும் தெளிவினைத் தருவாள்.

மாணவர்கள் கல்வி ஒன்றே இலக்கு, தொழில் செய்வோர் தொழிலே இலக்கு இன்னும் அவரவர் கடமையே அவரவர்க்கு முக்கியம் எனக் கர்மாவினைச் செய்யவைப்பவள் அவளே.

துறவியருக்கு பரம்பொருளை அடைவதே முக்கியம், அங்கே என்ன சிக்கல்கள் தடைகள் தடுமாற்றம் வந்தாலும் அவர்கள் கடந்து செல்லல் அவசியம். அங்கே துணைவருபவள் இவளே.

அப்படியே குடும்பத்தவர்க்கு குறிப்பாக குலபெண்களுக்கு குடும்பம் முக்கியம். குடும்பத்தார் முக்கியம். இவர்களைக் காப்பதே கடமை, கர்மா என்ற தெளிவையும் அதிலிருந்து கொஞ்சமும் தடுமாறாமல் காத்துச் செல்லும் வரம் தருபவள் இவளே.

இவளே ஒவ்வொருவரையும் பொறுப்பான கட்டத்துக்கு அழைத்துச் செல்வாள். இவள் துணை இருந்தால் ஏற்ற கர்மம் ஏற்ற தொழில் ஏற்ற குடும்பம் என எல்லாமும் வாய்க்கும்.

அதனாலே இவளை இரண்டாம் நாளில் வணங்கச் சொன்னார்கள் ஞானியர்.

இவள் கிட்டதட்ட சிவனை வரமிருந்து அடைந்த மலைமகளின் சாயல். ஆனால், அந்த உறுதி, வைராக்கியம், விடாபிடியான தவம், தீராத் தவம், முழுக்கவனம் கொண்ட தவம் என எல்லாமும் வழங்குபவள் இவளே.

இந்தப் பிரபஞ்சம் ஒரு ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம், அங்கே கோள்கள் அதனதன் பாதையில் சரியாக இயங்குகின்றன, அதனதன் வழியில் அதனதன் கடமையினைச் சரியாகச் சீராகச் செய்கின்றன‌.

இங்கே ஒன்று குழம்பினாலும் மாபெரும் பிரபஞ்சத்தின் இயக்கம் குலையும், அந்தப் பெரும் இயக்கத்தைப் பிரம்மத்தனமான இயக்கமாக, ஒரே இயக்கமாக செய்பவள் இவளே.

சூரியன் ஏன் காய்கின்றது, பூமி ஏன் சுற்றுகின்றது, நட்சத்திரங்கள் ஏன் எரிகின்றன எதற்காக இவை இயங்கவேண்டும், எதற்காக இந்த கோள்கள் சுற்றவேண்டும் என்பதெல்லாம் யாருமறியா ரகசியங்கள்.

ஆனால், அவை கடமை ஒன்றே, கர்மா ஒன்றே தங்கள் செயலாக பலன் எதிர்பாராது உறுதியாக சரியாக இயங்குகின்றன அல்லவா? அந்த இயக்கம் தருபவள் அன்னை.

ஆம். பிரபஞ்ச இயக்கத்தை உறுதி செய்யும் அந்தப் "பிரம்ம சாரிணி", மானிட உணர்வுகளையும் இயக்குகின்றாள்.

அவளிடம் வேண்டி அவள் அருள் பெற்றால் உணர்வுகள் கட்டுக்குள் வரும். சிந்தனைகள் தெளிவாகும், முழு அமைதி வரும்.

ஆம். இவள் சுவாதிஷ்டானத்தின் அதிபதி, அங்கே நின்று அருள் தருபவள், சுவாதிஷ்டான சக்கரம்
 
மூலாதாரத்தில் இருந்து அவரவர் கைவிரல் அளவில் நான்கு விரல் அளவு மேலே உள்ளது இந்த‌ சுவாதிஷ்டானம்.
இதனைக் குறித்து தெளிவாகப் பாடுகின்றார் போகர்.

"துதிசெய் மூலத்தை தாண்டி அப்பால்
துடியான நாலங் குலமே தாண்ட
பதிசெய்த பிரம்மனுட வீடுமாகும்
பகர்ந்த சுவாதிஷ்டானம் மென்றுபேரு
அதிசெய நால்வட்டாக வலயஞ்சுத்தல்
ஆறிதழ் தானச்சரத்தை யறியகேழு
பதிசெய்த பாமபுராமா யாக வந்தால்
பாங்கான நாடு பீசம் லங்நங் ஆமே"

இதனை நான்கு கோணம் கொண்ட ஆறு இதழ் சக்கரம் என யோக சாஸ்திரம் சொல்கின்றது, இது பொன்னிறமானது என்பதும் ரிஷிகள் சொன்னது.

இந்தச் சக்கரம் ஒருவனின் வாழ்வை நிர்ணயிப்பது என்றார்கள் ஞானியர். எப்படி நிர்ணயிக்கும் என்பதை சூட்சுமத் தத்துவங்களோடும் உடல் அமைப்போடும் காணலாம்.

இது இரண்டுக்கும் பொருந்திவருவதுதான் இந்துக்களின் ஞானம் எவ்வளவு பெரியது என்பதைச் சொல்லி வியக்க வைக்கும் விஷயம்.

இந்தச் சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது. இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம். அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்தச் சக்கரம் சரியாக துலங்கவில்லை என்றால் சிறுநீரக சிக்கல் முதல் எல்லாச் சிக்கலும் உருவாகும்.

குழந்தையின்மை, பெண்களுக்கு மாதாந்திர சிக்கல் எனப் பல விஷயங்களின் காரணம் இந்த சக்கரத்தின் தன்மைதான்.

இரத்த சோகை, மலச்சிக்கல், இடுப்புப் பிரச்சினைகள், மூட்டுப் பிரச்சினைகள், மண்ணீரல் கோளாறுகள், பித்தப்பை பிரச்சினைகள் எல்லாம் இங்கிருந்தான் உருவாகும்.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும், அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.

இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும், இந்தச் சக்கரத்தின் வீச்சு அப்படியானது.

இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும். இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்புடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன.

எப்படிப்பட்ட எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.

பயம், அச்ச உணர்வு, தன்னபிக்கையின்மை, பொறாமை, மூர்க்கத்தனம், கவனமின்மை, மன அழுத்தம், சமூக உறவின்மை, மிகுந்த உணர்ச்சிவசம் இதெல்லாம் இந்தச் சக்கரத்தின் குறைந்த செயல்பாட்டால் வருபவை.

இங்கேதான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும், உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.

காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும், அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.

சுகத்தைத் தேடிச் செல்லும் வாழ்வு மானுடனுடையது. அதற்கு இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம், நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களைச் சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழு திருப்தி கிடைக்கும், நிறைவு கிடைக்கும்.
 
மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்தச் சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும்.

இந்தச் சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு, அந்தச் சுகங்களை நோக்கி சக்தியினைக் கீழே இறக்கினால் அவன் போகி.

இதுதான் இன்ப போகம். இந்த சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.

இந்தச் சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.

ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்தச் சக்கர சக்தியினைப் பொறுத்தே.

ஆம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சிதான் ஒருவனை நடத்தும், அந்த உணர்ச்சி கர்ம வினைப்படி வரும்.

அன்னை இங்கே நின்று ஒருவனின் உணர்வுகளைக் கட்டுபடுத்தி ஒரே நோக்கில் செலுத்துவாள். சுவாதிஷ்டானத்தில் அவள் நின்று அருள்வழங்குகின்றாள் என்பது அதைத்தான் சொல்கின்றது.

ஆம். உணர்வுகளின் தடுமாற்றத்தில் மானுடன் சிக்கிக் கொள்ளாமல் தன் கர்மா ஒன்றைச் சரியாகச் செய்ய அவள் அருள் செய்வாள்.

மாட்டுக்கு கடிவாளம், குதிரைக்கு சேனை, யானைக்கு அங்குசம் போன்றவை அதனைக் கண்டபடி அலையவிடாமல் சரியான இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும், கப்பலின் திசைகாட்டும் கருவி அப்படியே.

அவ்வாறே குழப்பமும் ஆசைபோராட்டமும் மாய மயக்கமும் நிறைந்த உணர்வுகளை ஒடுக்கி அவனைச் சரியாக நடத்துவாள் அன்னை.

உடலியல் தத்துவப்படி உணர்வுகள் எல்லாமே ஹார்மோன்கள் எனும் நிணநீர் என்பார்கள் நவீன மருத்துவர்கள், இந்த நிணநீர்தான் ஒவ்வொரு வகை உணர்வையும் தோற்றுவிப்பது.

இந்த நீரை ஒவ்வொரு சுரப்பியும் சுரக்கும், அந்தச் சுரப்பிகளின் மூலம் சுவாதிஷ்டானம் எனும் அந்த இடத்தில் இருக்கும்.

இந்த நிணநீர்தான் ஒவ்வொரு உணர்வையும் நிர்மாணிக்கும், யானைக்கு மதம் பிடிப்பது ஒரு நிணரீர் என்றால் மானிட குழப்பத்துக்கும் உணர்வுக்கும் இந்த ஹார்மோன்கள் பெரும் காரணம்.

இவை ஒழுங்குபடுத்தப்பட்டால் ஆரோக்கியமான மனமும் உடலும் வாய்க்கும், இவை சரியில்லை என்றால் தாறுமாறாக இருந்தால் உடலும் மனமும் சிந்தனையும் கெடும்.

அன்னை பிரம்மசாரிணி இவற்றை ஒழுங்குப்படுத்தி தருவாள்.

இந்த ஒழுங்கு என்பது ஒருவனைத் தவக்கோலத்தில் தன் கடமையினைச் செய்யவைப்பது, தன் கர்மாவினைச் செய்யவைப்பது.

ஸ்ரீ சக்கர வழிபாட்டில் இந்த பிரம்ம சாரிணி தேவி என்பவள் "தேவி புரேசி" என அழைக்கப்படுகின்றாள். இந்த இரண்டாம் ஆவணம் பதினாறு இதழ் தாமரை தளங்களைக் கொண்டது.

இந்த ஆவணத்தின் ஒவ்வொரு தாமரை இதழ் போன்ற தளத்திலும் ஒவ்வொரு ஆகர்ஷண சக்தி தேவதைகள் அமர்ந்து உள்ளார்கள். அந்த சக்தி தேவதைகளில் பிரிதிவி, அப்பு, ஆகாசம், வாயு, மனம் போன்ற சில சக்திகள் உள்ளன.

இந்தக் கோட்டையினை "சர்வாசா பரிபூரக சக்ரம்’ என்பார்கள். அதாவது, அனைத்து நம்பிக்கைகளும் எண்ணங்களும் நிறைவேறும் என்பது பொருள்.

அன்னை தவமிருப்போர் தவம் நிறைவேற துணையிருப்பாள் என்பது ஸ்ரீ சக்கரத்தில் இரண்டாவதாக சொல்லப்படும் தத்துவம்.

அந்தத் தத்துவத்தின் காட்சிவடிவமே அந்தப் பாறையும் அங்கே அவள் பதித்த பாதமும்.

இந்தத் தவக்கோலத்தில் கன்னியாகுமரி பாறையில் அன்னை நின்றாள், அந்தத் தென்முனையில் பகவதி அம்மன் ஆலயம் வாலைக்கானது.

அந்தப் பாறைதான் " ஸ்ரீபாத பாறை" என அன்னை தவமிருந்த பாறைதான் இந்த "பிரம்மசாரிணி" ஆலயம் இருக்குமிடம்.

அங்குதான் அன்னை தவமிருந்தாள், அந்தத் தவத்தை எப்படி இருந்தாள் என்பதைத்தான அங்கே தன் பாதம் பதித்துச் சொன்னாள்.

அதாவது, அங்கே ஒரு பாதம் மட்டும்தான் பதிந்திருக்கும். ஆம். அப்படித் தவத்தை ஒரு காலில் செய்தாள்.

அந்த அளவு தன் தவமே பிராதனமாக, தன் இலக்கு ஒன்றே முக்கியமாக, அதுவே வாழ்வாக, அதுவே சுதர்மமாக நின்று செய்து சிவனை அடைந்தாள்.

அப்படிச் சிவனை அடைந்தவள் நம் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டிச் சென்றாள்.

அந்த "ஒற்றைப் பாதம்" என்பது அவள் தவமிருந்த காட்சி மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் நம் தர்மத்தில் நம் கடமையில் காக்க அவள் ஓடி வருவாள் என்பது.

ஓடிவரும் போது இருபாதமும் ஒன்றாக பதிய முடியாது, ஒரு பாதமேதான் பதியும். அந்தக் குமரி ஸ்ரீபாத பாறையில் பதிந்திருக்கும் பாதம், நம் கர்மத்தில் நம் கடமையில் நம் இலக்கில் நம்மை காக்க அன்னை ஓடிவருவாள் என்பதைக் காட்டுகின்றது.

அன்னை அங்கே சொல்லும் போதனை அதுதான்.

ஆம். தேவி பிரம்மசாரிணி நம்மை அடுத்த படிநிலைக்கு நகர்த்துவாள், இலக்கு எது அதை எப்படி அடையவேண்டும் எனக் காட்டுவாள், இலக்கை அடைய எல்லா உணர்வுகளையும் கட்டுப்படுத்தி சுக இன்ப மயக்கங்கள் மாய ஆசைகளை அகற்றி ஒருமுகம் செய்வாள்.

இன்னும் ஆழ கவனியுங்கள், கன்னியாகுமரி பாறையில் அவள் செய்த தவம் திருமணத்துக்கு முந்தையது. அதாவது, தன் இலக்கில் அவள் வெல்ல செய்த தவம்.

அந்தத் தவத்தை அவளைச் செய்ய சொன்னவர் மகரிஷி நாரதர்.

அவள் செய்த தவம் கடுமையானது, சிவனை அடைய சில ஆயிரம் வருடங்கள் வெறும் வில்வ இலைகளையே உணவாகக் கொண்ட தவம் அது.

அப்படி எல்லாம் தியாகம் செய்தாள் அவள் "அபர்ணா" என்றானாள், "ப்ர்ண" என்றால் இலை. ‘அபர்ணா’ என்றால் விரதத்தை அனுஷ்டிக்கும்போது இலைகளை உண்பதையும் தியாகம் செய்தவள் என்று பொருள்.

அந்தத் தவமே சித்தியாயிற்று. இதுதான் கன்னியாகுமரி "ஸ்ரீபாத பாறை" சொல்லும் தத்துவம்.

இந்தத் தேவியினை வழிபட அமைதி வரும், கவனம் ஒரு இடத்தில் இலக்கில் குவியும். அவள் அருளில் கர்மமே கண்ணாகி காரியத்தில் முழுக் கவனமாகச் செயலாற்றும் பெரும் வலிமை கிடைக்கும்.

அர்ஜூனன் கண்ணுக்குக் கிளியின் கண் மட்டும் தெரிந்தது போல் அன்னையின் அருள் பெற்றால் தன் கடமை, தன் கர்மா ஒன்றே தெரியும்.

இவளின் வடிவம் துறவியர், தவசிகள் வடிவம். இவளின் கரங்களில் பிரார்த்தனை மாலையும், கமண்டலமும் இருக்கும். இவளுக்கு வாகனம் ஏதும் இல்லை.

பூமியில் காலால் நடப்பவளாக இவள் காட்சிபடுத்தப்படுகிறாள். அதன் பொருள் அவரவர் கர்மாவினை அவரவரே செய்தல் வேண்டும், தனியாக தவம்போல் கர்மத்தை ஏற்றுச் செய்யவேண்டும். இன்னொரு கர்மாவினைத் தன்னோடு இணைக்கக் கூடாது என்பதற்காக‌.

தனித்திரு, தவமிரு, எதிலும் ஒட்டிக்கொள்ளாதே, எதையும் சார்ந்திராதே, எது உன் இலக்கோ அதை நோக்கி தவமிருந்து, எந்தச் சோதனையிலும் கலங்காமல் இரு, அதற்குரிய பலத்தை சக்தியினை நான் தருவேன் என்பதே அவள் தோற்றம் சொல்லும் தாத்பரியம்.

நவராத்திரி இரண்டாம் நாளான இன்று அவளுக்கு பச்சை நிற மேடையிட்டு ஆடையிட்டு வணங்குதல் வேண்டும், கடலை சுண்டலும், தேங்காய் பாயாசமும் நல்லது.

பருப்பு சாதம் நல்ல பலனைத் தரும்.

இந்த அன்னைதான் கன்னியாகுமரி பாறையில் நின்று தத்துவம் போதிப்பவள். இந்துமதத்தில் ஆழக்கரைந்த சுவாமி விவேகானந்தர் அந்த மகத்துவம் அறிந்துதான் அந்த பாறைக்கு ஓடிவந்து தவமிருந்தார்.

அவர் தன் கர்மத்தை செய்ய, தன் கர்மாவினைச் செய்ய முழு வரமும் அங்கே பெற்றுக்கொண்டார், அதன் பின்புதான் மேற்குலகில் அமெரிக்காவில் இந்து தர்மத்தை அவர் விதைத்தார். இன்று அது பெரும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

விவேகானந்தர் என்றல்ல இராமானுஜர் உள்ளிட்ட மகான்கள் அங்கேதான் தங்கள் தவத்தின் வலிமை எல்லாம் அடைந்தனர், தவவலிமை தருபவள் அன்னை.

ஆம். அந்தத் தென்முனை பாறை சாதாரணம் அல்ல, அங்கு அன்னை எக்காலமும் உண்டு, அங்கே நின்று ஒவ்வொருவர் உணர்வுகளை அடக்கி அவர்கள் எந்த உயர்ந்த நோக்கத்தை அடைய தவமிருக்கின்றார்களோ அவர்கள் தவம் சித்தியடைய அதன் பலனை உலகம் அடைய அவள் அருள் புரிவாள்.

இங்கே நுணுக்கமாக அவள் போதிக்கும் தத்துவம் தியாகம்.

அன்னை அப்பாறையில் "அபர்ணா" எனும் தியாகியாக நின்றார் என்பது தன் கர்மாவினை, தன் கடமையினைச் செய்ய,பெரும் இலக்கை அடைய ஒருவன் பல தியாகங்களைச் செய்யவேண்டும் என்பது.

ஆம். தியாகம் இன்றி கர்மத்தை கடமையினை முழுக்க செய்யமுடியாது. தொழிலோ, துறவோ தியாகம் மகா முக்கியம் என்பதைக் காட்டினாள்.

அந்த வழிகாட்டல்தான் நவராத்திரியில் குலப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பாடம், குடும்பம் என்பது தியாகத்தால் இயங்கக் கூடியது, அங்கே ஒரு பெண் தன்னை தியாகம் செய்து பாடுபடும் போது தன்னலம், தன் சுகம், தன் ஆசைகள் என எல்லாவற்றையும் குடும்பத்துக்காய் இழந்து அந்தக் குடும்பம் வாழ தவமிருந்து அன்னையினை வேண்டும் போது அவள் பெரும் ஆசிவழங்குவாள்.

எந்தக் குடும்பத்தில் ஒரு பெண் தவமிருந்து அக்குடும்பத்துக்காய் வாழ்வாளோ, தன்னைத் துறந்து முழு அர்பணிப்பினை செய்து அக்குலத்துக்காய் நிற்பாளோ அந்தக் குலம் பெரும் வாழ்வு வாழும்.

அவளுக்கு அன்னை பிரம்மசாரிணி துணைவருவாள், இந்தப் பெரும் தத்துவத்தை போதித்தபடி நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரார்த்திக்கின்றார்கள் இந்துக்கள்
 
அவளுக்கான ஸ்லோகம் இதோ.

"ததானா கரபத்மாப்யாமக்ஷமாலா கமண்டலு |
தேவி ப்ரஸீதது மயி பிரம்மசாரிண்யனுத்தமா || "

"யார் தன் இரு கரகமலங்களிலும் ருத்ராக்ஷ மாலை மற்றும் கமண்டலுவைத் தரித்துக் கொண்டிருக்கிறார்களோ அத்தகைய உன்னதமான தேவி பிரம்மசாரிணி தாயே, என் மீது கருணைக் காட்டு"
 
நவராத்திரி- 3 ம் நாள் காளி

நவராத்திரியின் மூன்றாம் நாள், காளி வடிவான துர்க்கைக்கானது, காளி எப்படி தோன்றினாள் என்பதை தேவி மாகாமித்யம் சொல்லும். மது, கைடபன் எனும் அசுரர்களை பகவான் விஷ்ணு சம்ஹாரம் செய்யும் காட்சியிலே கண்டோம்.

இந்த ஸ்லோகம் அதைத் தெளிவாகச் சொல்கின்றது. இதுதான் காளியின் தோற்றம் பற்றிய ஸ்லோகம்.
"கட்கம் சக்ர-கதேஷு-சாப-பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ்-த்ரிநயனாம் ஸர்வாங்க-பூஷாவ்ருதாம் |
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ்-துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
நீலாச்ம-த்யுதி மாஸ்ய-பாத-தசகாம் ஸேவே மஹா-காளிகாம்||"

பகவான் விஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் போது உருவான மது கைடப அசுரர்களை அழிக்கும் பொருட்டு தாமரையில் இருக்கும் பிரம்மன் எந்த தேவியினை அழைத்தானோ, அந்த மகா காளியினை சேவிக்கிறேன்.

தனது பத்து கைகளில் வாள், சக்கரம், வில், அம்பு, கதை, பரிகம், சூலம், புசுண்டி, சிரஸ், சங்க்கம் இவற்றை தரித்து சர்வாபரண பூஷிதையாய் நீலமணிக்கு ஒப்பான ஜொலிப்புடனும், மூன்று கண்களுடனும், பத்து முகங்களுடனும், பத்து கால்களுடனும் அவள் விளங்குகின்றாள் எனப் பொருள்.
இதுதான் காளி பற்றி புராணம் சொல்லும் செய்தி. அதாவது அவள் ஆதிசக்தியாய் இருக்கின்றாள். இந்த பிரபஞ்சம் மீண்டும் படைக்கப்படும்போதும், அதாவது எல்லாமும் அழிந்து மீண்டும் எல்லா மூல‌ தெய்வங்களும் படைக்கப்படும் போதும், அவள் ஆதி அந்தம் இல்லாமல் இருக்கின்றாள் என்பதைச் சொல்லும் பாடல் இது.

1000019319.webp
 
Back
Top
Developed and maintained by – Akeshya