சப்த மாதாக்கள் : 01
ஆடிமாதம் அம்மனுக்கானது, அப்படியான மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சப்த மாந்தர்களுக்கானது, அவர்கள் ஏழுபேரும் தனியாக இருந்தால் சப்த கன்னியர் , சிவாலயத்தின் உள்ளே இருந்தால் அவர்கள் சப்த மாதாக்கள்
இந்த சப்த மாதாக்கள் பார்வதியின் அம்சம், அதாவது இவர்கள் ஏழுபேர்தான் உலகை இயக்குபவர்கள் எல்லாமும் இந்த ஏழு பேரில் அடங்கிவிடுகின்றது
அவ்வகையில் ஒவ்வொருவர் குலதெய்வமும் இந்த ஏழுபேரின் அம்சத்தில் அடங்குகின்றது, இதனால் ஆடியின் முதல் ஏழு நாளும் இவர்களை வணங்குதல் மரபு
இன்றும் கேரளத்தில் இது "கற்கடகம் ஏழு" எனும் சம்பிரதாயமாக கொண்டாடபடும், அன்று விநாயகருக்கும் சப்த மாதாக்களுக்கும் ஹோம வழிபாடும் செய்யபடும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனுக்கு அந்த பூஜை நடக்கும், ஒருத்தி பிரதானம் மற்றவரெல்லாம் உடன் இருப்பார்கள்
இந்த சப்தமாதா வழிபாடு ஆடியில் விஷேஷம், ஒவ்வொருவரும் முதல் ஏழு நாட்கள் வழிபடும் கடமை உண்டு, இது மிகுந்த பலனை கொண்டுவரும்
ஆடியில் இந்த சப்தமாதாக்களை ஆலயத்தில் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம் இது குலதெய்வ வழிபாட்டுடன் அதாவது எல்லா குலதெய்வமும் இவர்களில் அடக்கம் என்பதால் மிகுந்த அருளை பெற்று தரும்
முதல் சப்தமாதா பிராமி, இன்றைய நாள் அவளுக்கானது
இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது
இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது
இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார அசுரனை அழிக்கும் போது யோகேஸ்வரி எனும் ச்கதியினை , அவள் மகேஸ்வரி எனும் சக்தியினை உருவாக்கினாள், அவளுக்கு துணையாக பிரம்மன் பிராம்மியினையும் நாராயணன் நாராயனியினையும் முருகபெருமான் கௌமாரியினையும் , இந்திரன் இந்திராணியினையும், வராஹமூற்த்தி வராஹியினையும், யமன் சாமுண்டியினையு உருவாக்கி , தங்களின் சக்தியில் இருந்து உருவாக்கி கொடுத்ததாக ஒரு குறிப்பு உண்டு
மகிஷாசுரனை அழிக்க , கப்பத்தில் உருவாகாத பெண்ணால் மட்டும் அழிவு என வரம் பெற்ற மகிஷனை அழிக்க இந்த சக்திகள் உருவாகி வந்தன என்பது இன்னொரு குறிப்பு
ஆனால் மார்கண்டேய புராணம் தெளிவாக இந்த சப்த கன்னியர் தோற்றம் நிம்ப சுதம்ப அசுரனை அழிக்க இவை அவதரித்த்ன் என தெளிவாக சொல்கின்றது
வேதங்களில் இருந்து காவியம் படைத்த மகாகவி காளிதாசன் சப்த கன்னியர் சிவனை வணங்கும் பணிபெண்கள் என குமார சம்பவம் காவியத்தில் சொல்கின்றான்
மார்கண்டேய புராணம்தான் அந்த சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் என சொன்னது
பிராம்மி என்பவள் பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவள, மகேஸ்வரி சிவனில் இருந்து வந்த்வள், கௌமாரி முருகபெருமானின் சக்தியாய் வந்தவள், வராஹி வராஹமூத்தியிடம் இருந்த்ம், சாமுண்டி ருத்திரனிடம் இருந்தும் வந்தவள் என சொல்கின்றது
இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தாத்பரியம் ஒன்றுதான், அந்த தாத்பரியம் புரிந்தால்தான் சப்த கன்னியரின் அவதாரமும் அவை இயக்கும் முறையும் அருளும் அவசியமும் முழுக்க புரியும்
இந்த உலகின் இயக்கம் முக்கியம் , இந்த உலகின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு விதி, ஒரு தர்மம், ஒரு சத்தியம் ஒரு ஞானம் உண்டு
ஒரு இயங்குவிதி உண்டு
இந்த விதியினை இந்த தர்மத்தை ஏதோ ஒரு சக்தி மாற்ற முயன்றால் அல்லது அழித்து தனக்கு ஏற்ப புதுவிதி ஏற்படுத்த முயன்றால் அந்த தர்மத்தை உடைக்க முயன்றால் இந்த சக்திகள் வந்து அந்த அதர்மத்தை அழித்து விதிப்படி தர்மபடி எல்லா இயக்கமும் நடக்க வழி செயுயும்
ஒரு ஒயக்கம் தர்மபடி விதிபடி அதனதனை பகவான் படைத்தபடி அதனதன் ஞானத்தின்படி நடக்க இந்த சக்திகள் வழி செய்யும்
இங்கு எல்லாமே பிரபஞ்சததின் ஏதோ ஒரு திட்டத்திற்காக அந்த சக்தியின் விருப்பபட் இயங்குகின்றன, அந்த இயக்கத்தை சரியாக நடக்க வைக்க, தடைகள் வந்தால் விலக்கி, பெரும் குறுக்கீடுகள் வந்தால் உடைத்து அந்த இயக்கத்தை சரியாக செய்ய வைப்பவை இந்த ஏழு சக்திகள்
இந்த பிராம்மிதான் சப்த கன்னியரில் முதல் தெய்வம்
இவள் பிரம்மனின் முகத்தில் இருந்து உருவானவள் என்பது புராணம் சொல்லும் செய்தி, ஒருவகையில் அல்ல இவள் முழுக்கவே சரஸ்வதி அம்சம்
அன்னபறவையில் வரும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்ட், அதில் ஏடுகள், அபயம், கமண்டலம், அட்சமாலிகை எனும் மந்திர மாலை என நான்கும் கொண்டிருப்பாள்
அன்னை தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்
இந்த பிராமிதான் சிந்தனைகளை நல்ல அறிவினை ஞானத்தை தருபவள், கலைகளின் மூலத்தை அருள்பவள், படைக்கும் தொழிலுக்கு பக்கபலமாய் இருப்பவள்
பிரம்மனின் ஞானம் இவள்தான், பிரம்மனின் சக்தி இவளேதான் இவள் அருளாலே பிரம்மன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்களையும் படைக்கின்றான்
இந்த பிராம்மி என்பவளை மானிடருக்கு சிந்தனை கல்வி கலை அருள்பவள் என மட்டும் கருதிவிட கூடாது,அவள் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு உயிரின் ஞானமாக நிற்கின்றாள், படைப்பின் தத்துவ விதி அவள் ஞானமே
அதாவது இந்த பிரபஞ்சம் மிக பெரியது ஏகபட்ட கோள்கள் அவற்றின் இயக்கங்களை கொண்டது, ஒவ்வொரு கோளும் அதனதன் இயக்கத்தில் இயங்குகின்றது, ஒரு புள்ளி கூட தன் பாதையில் இருந்து நகர்வதில்லை
அதன் இயல்பில் இருந்து விலகாமல் தன் கடமையினை தன் வேலையினை சரியாக செய்யும் அதில் ஒரு ஞானம் இருக்கும்
இதே ஞானம் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு , ஒரு ஒழுங்கான சீரான இயக்கம் உண்டு அது மழையில், மேகத்தி, காற்றில், நெருப்பில் என எல்லாவற்றிலும் உண்டு
அந்த ஞானமே ஒவ்வொரு உயிரிலும் உண்டு அது மீன்கள், பறவைகள், எறும்புகள், விலக்குகள், மரம் செடி கொடிகள் என ஒவ்வொன்றும் தன் இயல்பில் அதன் ஞானத்தில் சரியாக இயங்குகின்றன
தேனீக்கள், தூக்கணாங்குருவி, சிலந்தி, எறும்பு, யானை, சிங்கம், நாகம் என எல்லாமே ஒரு ஞானத்தில் ஒரு ஒழுங்கில் இயங்குவதை காணலாம்
கடலும் மலையும் அந்த விதிக்கு உட்பட்டதே
அந்த ஞானமான ஒழுங்கான அந்த விதியினை அந்த இயக்கத்தை அந்த சீராக நடக்கும் ஞானத்தை அருள்பவள் அன்னை பிராம்மி
எல்லா படைப்பிற்கும் அந்த விதியினை ஒழுங்கை ஞானத்தை கல்வியினை கொடுக்கும் அவள் மானிடருக்கும் ஞானமும் அறிவும் கொடுக்கின்றாள்
( இதைத்தான் கம்பன் பாடுகின்றான் தன் சரஸ்வதி அந்தாதியில் பாடுகின்றான்
""தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.""
அதாவது வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு என சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றார்கள் )
அப்படியான நிலையில்
மானுடன் படைப்பின் உச்சம், ஈரேழு உலகங்களில் பூமியில் அவன் ஆத்ம சொரூபம். பரம்பொருளின் ஆத்மா தங்கியிருக்கும் கூடு
அந்த மனிதன் தன் சிந்தையால் செயலால் இறைவனை உணர்ந்து அடையவேண்டும், மற்றவரும் இறைவனை உணர வழி செய்யவேண்டும் என்பது அவன் வாழ்வின் தாத்பரியம்
இந்த மானுடருக்கும் இந்த உலகில் வாழ சில விதிகள் உண்டு , அவன் சிந்திக்க தெரிந்தவன் அவன் சிந்திப்பதை வெளியில் சொல்லும் அறிவு படைத்தவன், அவன் சொல்லும் செயலும் சிந்தனையும் இந்த உலகை நல்லவழியில் நடத்தவும் இந்த மானுட சமூகத்துக்கு நலல் வழிகாட்டுவதாகவும் பல பயன்களை செய்வதாகவும் இருத்தல் வேண்டும்
மானுட விதிப்படி அவன் உலகில் வாழ பல விஷயங்கள் அவசியம் அவற்றை உருவாக்கவும் அடையவும் மனுகுலம் மேன்மையடையவும் மகிழ்ச்சியாய் வாழவும் அவனுக்கு சில விதிகள் நல்ல சிந்தனைகள் நல்ல ஞானங்கள் அவசியம்
அந்த ஞாந்த்தை அறிவினை தருபவள் அன்னை, அதனலே அவளை கல்விக்கு அதிபதி கலைக்கு அதிபதி என்றார்கள்
மானுட வாழ்வின் பெரும் பலம் சிந்தனை, அந்த சிந்தனையினை தருவது தலையின் மூளை , அன்னை அந்த மூளைக்கான பலததை தருவாள் நல்ல சிந்தனையினை தருவாள் ஞானத்தை கலை ஞானத்தை தருவாள் என்பதாலே அவள் தலையில் இருந்து உருவானதாக சொல்லபட்டாள்
பிரம்மன் படைப்பு தொழிலை செய்பவன், அந்த படைப்புக்கான மூலமாக அவளே உண்டு என்பதால் அவள் நல்ல அறிவு, ஞானன், கல்வி என எல்லாம்தந்து நல்ல மூளை பலத்தை கொடுப்பாள்
இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கல்வி, ஞானம் என்றவுடன் அது ஏட்டுகல்வி அல்ல, கலை என்றவுடன் 64 கலை என்பதுமட்டுமல்ல
மானுடன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சொல்லும் சொல்லிலும் செயலிலும் எல்லா தொழிலிலும் ஞானமும் அறிவும் அவசியம்
விவசாயி மீணவன், கொல்லன், தொழிலாளி, வியாபாரி என எல்லாவற்றிலும் ஒரு ஞானமும் அறிவும், செய்வதை அழகுறை செய்து அதை மக்களிடம் பயனுற ஒப்படைத்து தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதிலும் நல்ல அறிவு முக்கியம்
அது சமையல் முதல் சந்தை வரை எந்த தொழிலாகவும் இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு அறிவும் ஞானமும் நலல விதியும் அவசியம், அப்போதுதான் அது நிலைக்கும் சிறக்கும்
அந்த ஞானத்தை அறிவை தருபவள் இந்த பிராம்மி, அவளை வழிபட்டு துவங்கினால் எல்லாம் துலங்கும், அவள் செய்ய் தொழிலுக்கு அல்லது அவரவர் வாழ்க்கை நிலைக்கு என்ன வரம் வேண்டுமோ அதை அருள்வாள்
அதனால் சப்த கன்னியரில் அவளை முதலாவதாக வைத்தார்கள், "எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்" என்பதால் அவளை சிரசில் இருந்து வந்தவள் சிரசுக்கு காவல் என்றார்கள்
உடலின் ஏழு தாதுக்களில் மூளை முக்கியமானது அது தலையில் உண்டு, பிராம்மி தேவியின் அருளால் மூளை நலமாகும் பலமாகும் சிந்திக்கும் திறன் கூடும்
ஏழு தாதுக்களான உடல் நலல் பலம் பெற்றால்தான் சரியான இயக்கத்தில் இருந்தால்தான் ஆத்மா சரியாக செயலாற்றமுடியும் கர்மம் செய்யமுடியும்
அந்த உடலுக்கு மூளைதான் பிரதானம், அந்த மூளைதான் உட்லை இயக்கும் கட்டுபடுத்தும் இன்னும் ஒவனை சிந்திக்க செய்யும், அதுதான் அவனின் அடையாளமாகவே கருதபடும்
அந்த மூளையினை பலமாக்குபவள் அன்னை பிராம்மி
இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதாரமாக நிற்கின்றாள், அவளை வழிபட வழிபட அந்த் சக்கரம் துலங்கும், படைக்கும் திறன் புதிய புதிய புதிய சிந்தனைகள் பெருகும்
மூலாதார சக்கரம் துலங்க ஆரம்பித்தால் பல நல்ல மாறுதல்கள் சிந்தனையில் வரும், அன்னை அங்கேதான் இருந்து நடத்துகின்றாள்
ச்பத கன்னியர் வழிபாட்டில் முதல் இடம் இந்த பிராம்மி தேவிக்கு அவளை வழிபட வழிபட ஞானமும் அறிவும் பெருகும்
இந்த பிராம்மி என்பவள் புராணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் வருவாள், மகாபாரதத்தில் பெரும் அட்டகாசம் செய்யும் லவண அசுரன் என்பவனை, சிவனின் சூலாயுதம் கொண்ட அவன் யாரும் வெல்லமுடியா நிலையில் நின்று பெரும் அட்டகாசம் செய்வான்
அவனை ராமனின் அம்பு மூலம் அழிப்பான் சத்ருகன், அப்படி அழிக்கும் போது அவன் இந்த பிரமமியினை வேண்டி அழைத்து செல்வான் எனபது ராமாயணத்தின் ஒரு காட்சி
இங்கே ஒரு கேள்வி எழலாம், எழும்
அதாவது நல்ல சிந்தனைக்கு அறிவுக்கும் ஞானத்துக்குமான இந்த தேவியினை ஏன் நிம்ப சுதும்பனை அழிக்க படைகள் சண்டையிடும் களத்தில் இறக்கினார்கள் என்பது
அங்கேதான் பெரிய ஞானதாத்பரியம் உண்டு
போரில் வீரம் முக்கியம், ஆயுதம் முக்கியம் அப்படியே ஞானமும் அறிவும் மகா முக்கியம், அறிவு கலக்காத போர் வெற்றியடையாது அது முரட்டுதனமான சண்டையாகிவிடும்
இதனாலே பலமிருந்தாலும் அசுரர்கள் தோற்று ஓடுவார்கள்,
ஆடிமாதம் அம்மனுக்கானது, அப்படியான மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சப்த மாந்தர்களுக்கானது, அவர்கள் ஏழுபேரும் தனியாக இருந்தால் சப்த கன்னியர் , சிவாலயத்தின் உள்ளே இருந்தால் அவர்கள் சப்த மாதாக்கள்
இந்த சப்த மாதாக்கள் பார்வதியின் அம்சம், அதாவது இவர்கள் ஏழுபேர்தான் உலகை இயக்குபவர்கள் எல்லாமும் இந்த ஏழு பேரில் அடங்கிவிடுகின்றது
அவ்வகையில் ஒவ்வொருவர் குலதெய்வமும் இந்த ஏழுபேரின் அம்சத்தில் அடங்குகின்றது, இதனால் ஆடியின் முதல் ஏழு நாளும் இவர்களை வணங்குதல் மரபு
இன்றும் கேரளத்தில் இது "கற்கடகம் ஏழு" எனும் சம்பிரதாயமாக கொண்டாடபடும், அன்று விநாயகருக்கும் சப்த மாதாக்களுக்கும் ஹோம வழிபாடும் செய்யபடும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனுக்கு அந்த பூஜை நடக்கும், ஒருத்தி பிரதானம் மற்றவரெல்லாம் உடன் இருப்பார்கள்
இந்த சப்தமாதா வழிபாடு ஆடியில் விஷேஷம், ஒவ்வொருவரும் முதல் ஏழு நாட்கள் வழிபடும் கடமை உண்டு, இது மிகுந்த பலனை கொண்டுவரும்
ஆடியில் இந்த சப்தமாதாக்களை ஆலயத்தில் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம் இது குலதெய்வ வழிபாட்டுடன் அதாவது எல்லா குலதெய்வமும் இவர்களில் அடக்கம் என்பதால் மிகுந்த அருளை பெற்று தரும்
முதல் சப்தமாதா பிராமி, இன்றைய நாள் அவளுக்கானது
இந்த பிரபஞசத்தை இயக்கும் மகா சக்திகளை ஏழுவிதமாக சக்திகளாக பிரித்து சொன்ன இந்துமதம் அவர்களை சப்த கன்னியர், சப்த மாதர்கள் என்ற அடையாளமிட்டு சொன்னது
இந்த சக்திகள் இயக்கும் சக்திகள், இயங்கும் பலத்தையும் அருளையும் தரும் சக்திகள். அந்த சக்திகளின் பலத்தாலே இந்த பிரபஞ்சமமும் அண்டமும் அண்டத்தின் வடிவமான மானிட பிண்டம் எனும் மானிட உடலும் இயங்குகின்றது
இந்த சக்திகளின் தோற்றம் பற்றி புராணத்தில் பல கருத்துக்கள் உண்டு, சிவன் அந்தகார அசுரனை அழிக்கும் போது யோகேஸ்வரி எனும் ச்கதியினை , அவள் மகேஸ்வரி எனும் சக்தியினை உருவாக்கினாள், அவளுக்கு துணையாக பிரம்மன் பிராம்மியினையும் நாராயணன் நாராயனியினையும் முருகபெருமான் கௌமாரியினையும் , இந்திரன் இந்திராணியினையும், வராஹமூற்த்தி வராஹியினையும், யமன் சாமுண்டியினையு உருவாக்கி , தங்களின் சக்தியில் இருந்து உருவாக்கி கொடுத்ததாக ஒரு குறிப்பு உண்டு
மகிஷாசுரனை அழிக்க , கப்பத்தில் உருவாகாத பெண்ணால் மட்டும் அழிவு என வரம் பெற்ற மகிஷனை அழிக்க இந்த சக்திகள் உருவாகி வந்தன என்பது இன்னொரு குறிப்பு
ஆனால் மார்கண்டேய புராணம் தெளிவாக இந்த சப்த கன்னியர் தோற்றம் நிம்ப சுதம்ப அசுரனை அழிக்க இவை அவதரித்த்ன் என தெளிவாக சொல்கின்றது
வேதங்களில் இருந்து காவியம் படைத்த மகாகவி காளிதாசன் சப்த கன்னியர் சிவனை வணங்கும் பணிபெண்கள் என குமார சம்பவம் காவியத்தில் சொல்கின்றான்
மார்கண்டேய புராணம்தான் அந்த சப்த கன்னியர் பிராம்மி, மஹேஸ்வரி, கௌமாரி, நாராயணி, இந்திராணி, வராஹி, சாமுண்டி என ஏழுபேர் என சொன்னது
பிராம்மி என்பவள் பிரம்மனின் முகத்தில் இருந்து வந்தவள, மகேஸ்வரி சிவனில் இருந்து வந்த்வள், கௌமாரி முருகபெருமானின் சக்தியாய் வந்தவள், வராஹி வராஹமூத்தியிடம் இருந்த்ம், சாமுண்டி ருத்திரனிடம் இருந்தும் வந்தவள் என சொல்கின்றது
இங்கே அறிந்துகொள்ள வேண்டிய தாத்பரியம் ஒன்றுதான், அந்த தாத்பரியம் புரிந்தால்தான் சப்த கன்னியரின் அவதாரமும் அவை இயக்கும் முறையும் அருளும் அவசியமும் முழுக்க புரியும்
இந்த உலகின் இயக்கம் முக்கியம் , இந்த உலகின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு விதி, ஒரு தர்மம், ஒரு சத்தியம் ஒரு ஞானம் உண்டு
ஒரு இயங்குவிதி உண்டு
இந்த விதியினை இந்த தர்மத்தை ஏதோ ஒரு சக்தி மாற்ற முயன்றால் அல்லது அழித்து தனக்கு ஏற்ப புதுவிதி ஏற்படுத்த முயன்றால் அந்த தர்மத்தை உடைக்க முயன்றால் இந்த சக்திகள் வந்து அந்த அதர்மத்தை அழித்து விதிப்படி தர்மபடி எல்லா இயக்கமும் நடக்க வழி செயுயும்
ஒரு ஒயக்கம் தர்மபடி விதிபடி அதனதனை பகவான் படைத்தபடி அதனதன் ஞானத்தின்படி நடக்க இந்த சக்திகள் வழி செய்யும்
இங்கு எல்லாமே பிரபஞ்சததின் ஏதோ ஒரு திட்டத்திற்காக அந்த சக்தியின் விருப்பபட் இயங்குகின்றன, அந்த இயக்கத்தை சரியாக நடக்க வைக்க, தடைகள் வந்தால் விலக்கி, பெரும் குறுக்கீடுகள் வந்தால் உடைத்து அந்த இயக்கத்தை சரியாக செய்ய வைப்பவை இந்த ஏழு சக்திகள்
இந்த பிராம்மிதான் சப்த கன்னியரில் முதல் தெய்வம்
இவள் பிரம்மனின் முகத்தில் இருந்து உருவானவள் என்பது புராணம் சொல்லும் செய்தி, ஒருவகையில் அல்ல இவள் முழுக்கவே சரஸ்வதி அம்சம்
அன்னபறவையில் வரும் இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்ட், அதில் ஏடுகள், அபயம், கமண்டலம், அட்சமாலிகை எனும் மந்திர மாலை என நான்கும் கொண்டிருப்பாள்
அன்னை தர்ப்பை புல்லில் வாசம் செய்பவள்
இந்த பிராமிதான் சிந்தனைகளை நல்ல அறிவினை ஞானத்தை தருபவள், கலைகளின் மூலத்தை அருள்பவள், படைக்கும் தொழிலுக்கு பக்கபலமாய் இருப்பவள்
பிரம்மனின் ஞானம் இவள்தான், பிரம்மனின் சக்தி இவளேதான் இவள் அருளாலே பிரம்மன் இந்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்களையும் படைக்கின்றான்
இந்த பிராம்மி என்பவளை மானிடருக்கு சிந்தனை கல்வி கலை அருள்பவள் என மட்டும் கருதிவிட கூடாது,அவள் ஒவ்வொரு படைப்பின் ஒவ்வொரு உயிரின் ஞானமாக நிற்கின்றாள், படைப்பின் தத்துவ விதி அவள் ஞானமே
அதாவது இந்த பிரபஞ்சம் மிக பெரியது ஏகபட்ட கோள்கள் அவற்றின் இயக்கங்களை கொண்டது, ஒவ்வொரு கோளும் அதனதன் இயக்கத்தில் இயங்குகின்றது, ஒரு புள்ளி கூட தன் பாதையில் இருந்து நகர்வதில்லை
அதன் இயல்பில் இருந்து விலகாமல் தன் கடமையினை தன் வேலையினை சரியாக செய்யும் அதில் ஒரு ஞானம் இருக்கும்
இதே ஞானம் ஒவ்வொரு படைப்பிலும் உண்டு , ஒரு ஒழுங்கான சீரான இயக்கம் உண்டு அது மழையில், மேகத்தி, காற்றில், நெருப்பில் என எல்லாவற்றிலும் உண்டு
அந்த ஞானமே ஒவ்வொரு உயிரிலும் உண்டு அது மீன்கள், பறவைகள், எறும்புகள், விலக்குகள், மரம் செடி கொடிகள் என ஒவ்வொன்றும் தன் இயல்பில் அதன் ஞானத்தில் சரியாக இயங்குகின்றன
தேனீக்கள், தூக்கணாங்குருவி, சிலந்தி, எறும்பு, யானை, சிங்கம், நாகம் என எல்லாமே ஒரு ஞானத்தில் ஒரு ஒழுங்கில் இயங்குவதை காணலாம்
கடலும் மலையும் அந்த விதிக்கு உட்பட்டதே
அந்த ஞானமான ஒழுங்கான அந்த விதியினை அந்த இயக்கத்தை அந்த சீராக நடக்கும் ஞானத்தை அருள்பவள் அன்னை பிராம்மி
எல்லா படைப்பிற்கும் அந்த விதியினை ஒழுங்கை ஞானத்தை கல்வியினை கொடுக்கும் அவள் மானிடருக்கும் ஞானமும் அறிவும் கொடுக்கின்றாள்
( இதைத்தான் கம்பன் பாடுகின்றான் தன் சரஸ்வதி அந்தாதியில் பாடுகின்றான்
""தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.""
அதாவது வானலோக தேவர்கள், தேவர்களின் அரசனான இந்திரன், உயர்ந்த புனிதமான வேதங்கள் போற்றும் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, சிவன் விஷ்ணு என சக்தி மிக்கோர், அசுரர்கள், முனிவர்கள், இன்னும் எல்லா உயிர்களும் வெண் தாமரையில் இருக்கும் அன்னையின் அருளால் ஞானம் பெறுகின்றார்கள் )
அப்படியான நிலையில்
மானுடன் படைப்பின் உச்சம், ஈரேழு உலகங்களில் பூமியில் அவன் ஆத்ம சொரூபம். பரம்பொருளின் ஆத்மா தங்கியிருக்கும் கூடு
அந்த மனிதன் தன் சிந்தையால் செயலால் இறைவனை உணர்ந்து அடையவேண்டும், மற்றவரும் இறைவனை உணர வழி செய்யவேண்டும் என்பது அவன் வாழ்வின் தாத்பரியம்
இந்த மானுடருக்கும் இந்த உலகில் வாழ சில விதிகள் உண்டு , அவன் சிந்திக்க தெரிந்தவன் அவன் சிந்திப்பதை வெளியில் சொல்லும் அறிவு படைத்தவன், அவன் சொல்லும் செயலும் சிந்தனையும் இந்த உலகை நல்லவழியில் நடத்தவும் இந்த மானுட சமூகத்துக்கு நலல் வழிகாட்டுவதாகவும் பல பயன்களை செய்வதாகவும் இருத்தல் வேண்டும்
மானுட விதிப்படி அவன் உலகில் வாழ பல விஷயங்கள் அவசியம் அவற்றை உருவாக்கவும் அடையவும் மனுகுலம் மேன்மையடையவும் மகிழ்ச்சியாய் வாழவும் அவனுக்கு சில விதிகள் நல்ல சிந்தனைகள் நல்ல ஞானங்கள் அவசியம்
அந்த ஞாந்த்தை அறிவினை தருபவள் அன்னை, அதனலே அவளை கல்விக்கு அதிபதி கலைக்கு அதிபதி என்றார்கள்
மானுட வாழ்வின் பெரும் பலம் சிந்தனை, அந்த சிந்தனையினை தருவது தலையின் மூளை , அன்னை அந்த மூளைக்கான பலததை தருவாள் நல்ல சிந்தனையினை தருவாள் ஞானத்தை கலை ஞானத்தை தருவாள் என்பதாலே அவள் தலையில் இருந்து உருவானதாக சொல்லபட்டாள்
பிரம்மன் படைப்பு தொழிலை செய்பவன், அந்த படைப்புக்கான மூலமாக அவளே உண்டு என்பதால் அவள் நல்ல அறிவு, ஞானன், கல்வி என எல்லாம்தந்து நல்ல மூளை பலத்தை கொடுப்பாள்
இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் கல்வி, ஞானம் என்றவுடன் அது ஏட்டுகல்வி அல்ல, கலை என்றவுடன் 64 கலை என்பதுமட்டுமல்ல
மானுடன் செய்யும் ஒவ்வொரு தொழிலிலும் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் சொல்லும் சொல்லிலும் செயலிலும் எல்லா தொழிலிலும் ஞானமும் அறிவும் அவசியம்
விவசாயி மீணவன், கொல்லன், தொழிலாளி, வியாபாரி என எல்லாவற்றிலும் ஒரு ஞானமும் அறிவும், செய்வதை அழகுறை செய்து அதை மக்களிடம் பயனுற ஒப்படைத்து தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதிலும் நல்ல அறிவு முக்கியம்
அது சமையல் முதல் சந்தை வரை எந்த தொழிலாகவும் இருக்கட்டும், எல்லாவற்றிலும் ஒரு அறிவும் ஞானமும் நலல விதியும் அவசியம், அப்போதுதான் அது நிலைக்கும் சிறக்கும்
அந்த ஞானத்தை அறிவை தருபவள் இந்த பிராம்மி, அவளை வழிபட்டு துவங்கினால் எல்லாம் துலங்கும், அவள் செய்ய் தொழிலுக்கு அல்லது அவரவர் வாழ்க்கை நிலைக்கு என்ன வரம் வேண்டுமோ அதை அருள்வாள்
அதனால் சப்த கன்னியரில் அவளை முதலாவதாக வைத்தார்கள், "எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்" என்பதால் அவளை சிரசில் இருந்து வந்தவள் சிரசுக்கு காவல் என்றார்கள்
உடலின் ஏழு தாதுக்களில் மூளை முக்கியமானது அது தலையில் உண்டு, பிராம்மி தேவியின் அருளால் மூளை நலமாகும் பலமாகும் சிந்திக்கும் திறன் கூடும்
ஏழு தாதுக்களான உடல் நலல் பலம் பெற்றால்தான் சரியான இயக்கத்தில் இருந்தால்தான் ஆத்மா சரியாக செயலாற்றமுடியும் கர்மம் செய்யமுடியும்
அந்த உடலுக்கு மூளைதான் பிரதானம், அந்த மூளைதான் உட்லை இயக்கும் கட்டுபடுத்தும் இன்னும் ஒவனை சிந்திக்க செய்யும், அதுதான் அவனின் அடையாளமாகவே கருதபடும்
அந்த மூளையினை பலமாக்குபவள் அன்னை பிராம்மி
இந்த அன்னைதான் யோக தத்துவத்தில் மூலாதாரமாக நிற்கின்றாள், அவளை வழிபட வழிபட அந்த் சக்கரம் துலங்கும், படைக்கும் திறன் புதிய புதிய புதிய சிந்தனைகள் பெருகும்
மூலாதார சக்கரம் துலங்க ஆரம்பித்தால் பல நல்ல மாறுதல்கள் சிந்தனையில் வரும், அன்னை அங்கேதான் இருந்து நடத்துகின்றாள்
ச்பத கன்னியர் வழிபாட்டில் முதல் இடம் இந்த பிராம்மி தேவிக்கு அவளை வழிபட வழிபட ஞானமும் அறிவும் பெருகும்
இந்த பிராம்மி என்பவள் புராணத்தில் மட்டுமல்ல பல இடங்களில் வருவாள், மகாபாரதத்தில் பெரும் அட்டகாசம் செய்யும் லவண அசுரன் என்பவனை, சிவனின் சூலாயுதம் கொண்ட அவன் யாரும் வெல்லமுடியா நிலையில் நின்று பெரும் அட்டகாசம் செய்வான்
அவனை ராமனின் அம்பு மூலம் அழிப்பான் சத்ருகன், அப்படி அழிக்கும் போது அவன் இந்த பிரமமியினை வேண்டி அழைத்து செல்வான் எனபது ராமாயணத்தின் ஒரு காட்சி
இங்கே ஒரு கேள்வி எழலாம், எழும்
அதாவது நல்ல சிந்தனைக்கு அறிவுக்கும் ஞானத்துக்குமான இந்த தேவியினை ஏன் நிம்ப சுதும்பனை அழிக்க படைகள் சண்டையிடும் களத்தில் இறக்கினார்கள் என்பது
அங்கேதான் பெரிய ஞானதாத்பரியம் உண்டு
போரில் வீரம் முக்கியம், ஆயுதம் முக்கியம் அப்படியே ஞானமும் அறிவும் மகா முக்கியம், அறிவு கலக்காத போர் வெற்றியடையாது அது முரட்டுதனமான சண்டையாகிவிடும்
இதனாலே பலமிருந்தாலும் அசுரர்கள் தோற்று ஓடுவார்கள்,