நிச்சயமாக காலையில் வாசல் தெளித்து கோலம் போட்டே ஆக வேண்டும்.
அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இருப்பினும் கோலம் போட முடியாத சூழ்நிலை என்பது நிறையவே உள்ளது.
கோலம் போட முடியாத சூழ்நிலையில் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சில பேர் வீடுகளில் அமாவாசை தினத்தில் கோலம் போடும் பழக்கத்தை வைத்து இருக்க மாட்டார்கள்.
சில சமயங்களில் பெண்களுக்கு உடல் நிலை சரியில்லாத சமயத்தில், பெண்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் ஆண்கள் வாசல் தெளித்து கோலம் போட முடியாது. இந்த சமயங்களில் என்ன செய்யலாம்?
அதாவது கோலம் போடும் இடத்தில் நடுவே இதனை கொட்டி வைத்து விடவேண்டாம்.
வீட்டில் இருக்கும் பெண்கள், கோலம் போட முடியவில்லை என்ற சூழ்நிலை வரும் போது பெண்கள் கையாலேயும் இதை செய்யலாம்.
வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில், ஆண்களும் இதை செய்யலாம் தவறு கிடையாது.
அந்த வாயில்லா ஜீவன்களுக்கு காலையில் நீங்கள் இந்த அரிசிமாவு வெல்லம் கலந்த உணவை அளித்து விட்டால், உங்கள் நில வாசப்படியில் கோலம் போட்டதை விட பல மடங்கு புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.
இதற்காக கோலமே போடாமல் தினசரி வெல்லம் பச்சரிசி கலந்த மாவை தூவிவிட்டு, சும்மாவே இருக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதேபோல் நில வாசலில் கோலம் போடும்போது பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம்.
வாசலில் கோலம் போட்டுவிட்டு தேவைப்பட்டால் பச்சரிசியையும் மாவையும் சர்க்கரையையும் கலந்து வாசலில் தூவி விடலாம்.
அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு துக்க காரியம் நடந்த வீட்டில் தான் கோலமும் போடாமல், தீபம் ஏற்றாமல் இருக்கும்.
கோலம் போட வில்லை என்பதனால், எந்த வருத்தமும் இனி உங்களுக்கு தேவையில்லை. அந்த கோலம் போட்டதற்கு ஈடாக நீங்கள் இந்த காரியத்தை செய்து வந்தால், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருப்பதோடு சேர்த்து, உங்களுக்கு புண்ணியமும் சேரும்.